கடலூர்,நவ.27- பாலர் பூங்கா அமைப்பின் சார்பில் குழந்தைகள் தின விழா கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியில் ஞாயி றன்று மாவட்ட அமைப்பாளர் கே.பி. சௌமியா தலைமையில் நடை பெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மயிலாடுதுறை மாவட்ட செய லாளர் நந்த ராஜேந்திரன் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சியை நடத்தினார். ஆசிரியர் தெரசா கேத்ரின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். பாலர் பூங்கா மாநில நிர்வாகி பால முருகன் பல்வேறு கதை - பாடல் - விளையாட்டுகளை குழந்தைகளுக்கு நிகழ்த்தி காட்டினார். முன்னதாக தமிழ்மணி வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 160 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கெடு த்தனர்.19 பேர் கொண்ட பாலர் பூங்கா கடலூர் மாவட்டத் தலைவராக ஹரி, செயலாளராக பரங்கிப்பேட்டை சௌ மியா, துணைத் தலைவர்களாக சிதம் பரம் விஷ்மன் கடலூர் ராகுல் இணை செயலாளர்களாக காட்டு மன்னார்கோயில் சோபியா, பண்ருட்டி ஜீவிகா பொருளாளராக தேன்மொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.