விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் கல்குறிச்சி, சமத்துவபுரம், பந்தனேந்தல், டி.வேப்பங்குளம் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் புதனன்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, திட்ட இயக்குநர் தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர் உட்பட பலர் உடனிருந்தனர்.