விருதுநகர், செப்.8- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்திற்கு உட்பட்டது கான்சாபுரம். இப்பகுதியைச் சேர்ந்தவர் கே.தங்கப்பாண்டியன். இவர் இந்திய இராணு வத்தில் சுபேதாரராக பணி புரிந்து வந்தார். இந்நிலை யில் அவர் பணியில் இருந்த போது விபத்தில் வீரமரணம டைந்தார். இந்நிலையில், அவரது உடல் சொந்த ஊரான கான்சாபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. இராணுவ வீரர் கே.தங்கப்பாண்டியனின் உடலுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெய சீலன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரி யாதை செலுத்தினார். பின்பு, அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.