districts

img

கண்ணூர் பல்கலை., துணைவேந்தர் மறு நியமனம்: உச்சநீதிமன்றம் ரத்து

புதுதில்லி, நவ.30- கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக் கழக துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திர னின் மறு நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.  மறு நியமனத்துக்கு அதே நடைமுறைக ளை பின்பற்ற தேவையில்லை. ஆனால் மறு நியமனத்துக்கான அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கண்ணூர் பல்கலைக்கழக துணை வேந்தராக கோபிநாத் ரவீந்திரனை மீண்டும் நியமிக்கும் நடவடிக்கை தனக்கு விருப்பமில்லை என வேந்தராக உள்ள ஆளுநர் தெரிவித்துள்ளார்.  வேந்தரின் அதிகாரத்தில், வெளியில் இருந்து  தலையிடுவதை ஏற்க முடியாது.  எனவே, மறுநியமனம் குறித்த அறிவிப்பை யும், அதை உறுதி செய்த உயர் நீதிமன்ற  உத்தரவையும் ரத்து செய்து, மேல்முறை யீட்டு மனுவை அனுமதித்து தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தர விட்டது.  நீதிபதி மனோஜ் மிஸ்ரா உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை நீதிபதி ஜேபி பார்திவாலா அறி வித்தார். தீர்ப்பை ஏற்பதாக கேரள அரசு தெரி வித்துள்ளது. மேல் முறையீடு செய்வ தில்லை என கோபிநாத் ரவீந்திரன் தெரி வித்துள்ளார். துணை வேந்தர் நியமனத்தில் முதல்வர் தலையிட்டதாக செய்தியாளர்க ளிடம் ஆளுநர் கூறினார். இதை மறுத்த முதல்வர், ஆளுநர் மனநிலை பிறழ்வால் பாதிக்கப்பட்டுள்ளாரா என சந்தேகம் எழுவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.