districts

அதிமுக மாநாட்டில் பாடல் பாடியவர் மீது மதுரை சரக காவல் துணைத் தலைவரிடம் புகார்

மதுரை, ஆக.22- மதுரையில் நடைபெற்ற அதிமுக  மாநாட்டில் திமுக துணைப்பொதுச செயலரும் மக்களவை உறுப்பினரு மான கனிமொழி பற்றி அவதூறு பாடல்  பாடியவர் மீதும், விழா ஏற்பாட்டா ளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை சரக காவல் துணைத்தலைவரிடம்  புகார் அளிக்கப்பட்டது. மதுரை திருநகரைச் சேர்ந்த  திமுக  தலைமை செயற்குழு உறுப்பினரான  வழக்குரைஞர் க.இளமகிழன் தலை மையில் திமுக வழக்குரைஞர்கள் மதுரை சரக காவல் துணைத்தலைவர் ஆர்.வி.ரம்யாபாரதியிடம் செவ்வா யன்று  புகார் அளித்தனர்.  அந்த புகாரில்,  மதுரை வலையங் குளத்தில் நடைபெற்ற அதிமுக  மாநாட்  டின்  கலை நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்று பாடிய ஒருவர்,  திமுக துணைப்பொதுச்செயலரும், தூத்துக் குடி மக்களவை உறுப்பினருமான கனி மொழிக்கு  அவப்பெயர் ஏற்படுத்தும்  வகையிலும்,  தரம் தாழ்ந்த முறையிலும்  பாடியுள்ளார். இந்த அவதூறை மாநாடு  ஏற்பாட்டாளர்களான, முன்னாள் முதல்  வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, சட்டப்பேரவை  உறுப்பினர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் திட்டமிட்டு அரங்கேற்றி யுள்ளனர். இதனால் திமுக கட்சிக்கும்,  மக்களவை உறுப்பினர் கனிமொழிக் கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. பொது வாழ்க்கையில் பிரபலமான பெண்ணை  களங்கப்படுத்தும் வகையில் அவ தூறான பாடல் வரிகளை,  பலரது முன்னி லையில்,  பொதுமேடையில் பாடியவர் மீதும், அவரை பாடவைத்தவர்கள் மீதும் உரிய சட்டப்பிரிவுகளில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.