இராமநாதபுரம்,மே 29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராமேஸ்வரத்தில் மே 28 சனிக் கிழமையன்று மே தினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் பேசியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை முழுமையாக மூடிட மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், இறால் பண்ணைகளில் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி, வாங்கும் சக்தியை இழந்துவருகின்றனர். எட்டாண்டு கால மோடி ஆட்சியில் மூன்று கோடி பேர் வேலை இழந் துள்ளனர் .கொரோனா காலத்தில் வேலையிழப்பு இன்னும் அதிகரித்துள் ளது. ஆனால் அதானி, அம்பானி ஒரு நாளுக்கு 1002 கோடியும் மணிக்கு 90 கோடி ரூபாய் என கொள்ளையடித்து குவித்து விட்டனர். இந்தியாவில் கொ ரோனா உயிரிழப்பு 47 லட்சம் என்கி றது உலக சுகாதார நிறுவனம் .ஆனால் பிரதமர் மோடி 4 லட்சத்து 80 ஆயிரம் என மகா பொய் சொல்கிறார். இராமேஸ்வரத்தில் இறால் பண்ணை களை சட்டவிரோதமாக இயங்க அனு மதிக்கும் அதிகாரிகள் மீது விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ணைகளை ஆய்வு செய்ய வேண்டும் .சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்துவோம் என்ற அறிவிப்பை தமிழக அரசு மறு பரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார். இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.