இராஜபாளையத்தில் கபடிப்போட்டி
இராஜபாளையம், மே 23- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பிஏசி ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-ஆவது மணி விழா ஆண்டு கபடிப் போட்டிகள் இராஜபாளையம் ஊர்க் காவல் படை மைதானத்தில் இரு தினங்கள் நடைபெற் றது. இறுதிப் போட்டியில் மீனாட்சிபுரம் செவன் லைன்ஸ் அணியும் வத்திராயிருப்பு வி.கே,ஏ.என் அணியும் மோதி னர். இந்த ஆட்டத்தில் மீனாட்சிபுரம் அணியினர் 34 - 24 புள்ளிக் கணக்கில் முதல் பரிசு பெற்று வெற்றிக் கோப்பை யை தட்டிச் சென்றனர். வத்திராயிருப்பு அணிக்கு இரண்டா வது பரிசு கிடைத்தது. கிருஷ்ணாபுரம் கேஎஸ்சி அணிக்கு மூன்றாவது பரிசும், சோலைசேரி ஜாம்பவான் கபடிக்குழுவிற்கு நான்காவது பரிசும் கிடைத்தது. பரிசுகளை கே.எஸ்.ஆர்.பஸ் அதிபர் ஜெகதீஷ் சௌந்தர் வழங்கினார். கபடி ஏ.பி. சுப்பிர மணியராஜா வரவேற்றுப் பேசினார். லயன்ஸ் ராமராஜ், எஸ்.எஸ்.ராதாகிருஷ்ண ராஜா உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடிக் குழுத் தலைவர் கபடி ஏ.பி. சுப்பிரமணிய ராஜா, செய லாளர் கனி முத்து குமரன், துணைத் தலைவர் டைகர் சம்சுதீன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
கடலுக்குள் பதுக்கிய 250 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
இராமேஸ்வரம்,மே 23- இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டையை சில மர்ம நபர்கள் பிடிப்பதாக கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளர் கனகராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைதொடர்ந்து, கடலோரபாதுகாப்பு குழும போலீசார் மண்டபம் முனைக்காடு கடல் பகுதி யில் செவ்வாய்க்கிழமையன்று படகில் சென்று கண்கா ணிப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். சந்தேகத்திற்கு இடமாக கடற்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 9 சாக்கு மூடைகள் ஒரே கயிற்றில் கட்டி வைக்கப்பட்டிருந்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.அப்போது அதில் 250 கிலோ கடல் அட்டை இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, கடல் அட்டையை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வனத்துறையின ரிடம் ஒப்படைத்தனர்.
சட்டவிரோத மதுபானக்கூடத்திற்கு சீல்வைப்பு- ஒருவர் கைது
சிவகங்கை, மே 23- சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலூகா சாலைக்கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்தியதாக ராஜா (வயது 47) என்பவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சாலைக்கிராமம் பேருந்து நிலைய வளாகத்திலேயே டாஸ்மாக் கடை உள்ளது. பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள டாஸ்மாக் கடையால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள் .இதனை அகற்ற வேண்டும் என்று அனைத் திந்திய ஜனநாயக மாத சங்கம் பலகட்ட போராட்டங்களை நடத்தியது. போராட்டங்கள் நடத்தும் போதெல்லாம் வட்டாட்சியர் அலு வலகம் டாஸ்மாக் நிர்வாகம் ஒரு மாதத்தில் அகற்றி விடுவோம் என்று ஏராளமான உறுதி மொழி எழுதி கொடுத்தனர்.ஆனால் உறுதி மொழி நிறைவேற்றப்படவில்லை. மேலும் சாலைக்கிராமம் பகுதியில் சட்ட விரோதமாக திறந்தவெளி பார் 24 மணிநேர மும் செயல்பட்டு வந்தது. தற்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் அதிரடி நடவடிக்கையாக திறந்தவெளி பார்களை பூட்டி சீல்வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் போராட்டத்தால் மதுரையில் கந்து வட்டிக்காரர்கள் கைது
மதுரை, மே 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட் டத்தால் மதுரையில் கந்து வட்டிக்காரர்கள் இரண்டு பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை மீனாம்பாள்புரம் சர்க்கரை செட்டி யார் படிப்பகம் அருகில் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த சிவப்பிரகாசம், பிரேமலதா தம்பதியர் கடந்த மாதம் ஏப் ரல் 25ஆம் தேதி கந்து வட்டிக்காரர்கள் கொடுமையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவத்திற்கு காரணமான கந்து வட்டிக்காரர்களை கைது செய்ய வேண்டும். உயி ரிழந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இந்திரா, சாந்தி ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் கூறுகையில், இதுபோன்ற கந்து வட்டி கொடுமைகள் நடைபெறக்கூடாது என்று தான் மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. செல்லூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் கந்துவட்டி கொடுமை சம்ப வங்கள் குறித்து தொடர்ந்து புகார் எழுந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை யிடம் புகார் அளிக்க பயந்து வருகிறார்கள். அதுவே இது போன்ற தற்கொலைகளுக்கு கார ணமாக உள்ளது . இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எடுத்த நடவடிக்கையால் காவல்துறையினர் தற்போது சிவப்பிரகாசம் - பிரேமலதா தம்பதி தற்கொலைக்கு சம்பந்தமான கந்துவட்டிக் காரர்கள் இருவரை கைது செய்துள்ளது. அவர்களுக்கு உரிய தண்டனையினை வாங்கி கொடுக்க காவல்துறையும் அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடக்காதவாறு தமிழக அரசு கந்துவட்டி கொடுமை தடுப்பு சட்டத்தை கடுமையான முறையில் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வேன் மோதி எலக்ட்ரீசியன் பலி
மதுரை, மே.24- மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் களத்து வீட்டில் குடியிருந்து வருபவர் ஆண்டார். இவரது மகன் நாகராஜன் (வயது 29)எலக்ட்ரீ சியன். இவர் அய்யங்கோட்டையில் இருந்து நகரிக்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந் தார். அப்போது நகரி சுடுகாடு முன்பாக சென்றபோது நகரில் இருந்து அய்யங்கோட்டை நோக்கி வேகமாக வந்த வேன் மோட் டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நாகராஜன் சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசுமருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வைகை ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
தேனி, மே 23- ஆண்டிபட்டி அருகே அரப்படித்தேவன்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த மாயாண்டி என்பவரது மகன் விக்னேஷ்(19). இவர் கோட்டூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். திங்கட்கிழமை வைகை ஆற்றில் குளிக்கச் சென்றவர் ஆழமான பகுதியில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தார்.உடலை கைப்பற்றிய காவல்துறையினர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிலம்பத்தில் ஆண்டிபட்டி மாணவர்கள் சாதனை
மகாராஜன் எம்எல்ஏ பாராட்டு
தேனி, மே 23- சிலம்பத்தில் சாதனை படைத்த ஆண்டிபட்டியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ .மகாராஜன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் சிலம்பம் சுற்றும் சாதனை போட்டி, ராமநாதபுரம் மாவட்டத் தில் நடைபெற்றது.இதில் 6 முதல் 25வயது வரை உள்ள 350பேர் பங்கேற்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுகந்த், ரூபா ஸ்ரீ, நரேஷ், பாலமுருகன், வாணி ஷா ஆகி யோர் கலந்து கொண்டு 3 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர். இவர்களை ஆண்டிபட்டி சட்ட மன்ற உறுப்பினர் மகாராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரி வித்து பாராட்டினார். திமுக கிழக்கு ஒன்றிய செயலா ளர் ராஜாராம், சிலம்ப பயிற்சியா ளர் விக்னேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.