மதுரை, ஜன.25- குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 புதன்கிழமை யன்று விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்படுகிறது.இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு மரியாதை செலுத்துகிறார். காலை 9 மணியளவில் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் உள்ள மகாகவி பாரதியார் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கும், காந்திப்பொட்டலில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும், தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் வீரத்தாய் வேலுநாச்சியார் உருவப்படத்திற்கும் மாலை யணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் ஆகி யோரும் பங்கேற்கின்றனர்.