மதுரை, பிப்.5- சமூக நீதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்தவரும் தாம் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பிலும் வெறும் சட்டத்தை மட்டும் மேற்கோள் காட்டாமல் மனித சமூகத்தின் வாழ்நிலையையும், அவர்களது வாழ்க்கையில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களையும் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, சமூக ஆர்வலர்களுக்கும் தெரிவித்த நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் பெயரிலான விருது வழங்கும் விழா மதுரையில சனிக்கிழமை நடைபெற்றது. விருதுகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி டி.ஹரிபரந்தாமன் வழங்கினார். இந்த விருது வழங்கும் நிகழ்வை சமூக செயற்பாட்டு அமைப்பான சோக்கோ அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. நீதியரசர் கிருஷ்ணய்யர் சமூக நீதி போராளிகளுக்கான விருதை திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரு மான கே.பாலபாரதி பெற்றுக்கொண்டார். பெண்கள் உரிமைகள், மனித உரிமை பிரச்சனைகள் தலையிடும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கும் விருது வழங்கப்பட்டது. விருதை மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய் பெற்றுக்கொண்டார், நிகழ்வில் சோக்கோ அறக்கட்டளை நிர்வாகி ஏ.மகபூப்பாட்சா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆர். சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும், சென்னை செயின்ட் இசபெல் மருத்துவமனையின் மூத்த குழந்தைகள் நல ஆலோசகர் டாக்டர் சி.எஸ்.ரெக்ஸ் சற்குணம், முன்னாள் பொது சுகாதாரத்துறை இயக்குநர் கே. குழந்தைசாமி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதன்மை யர் லூர்து மேரி, மனித உரிமை ஆர்வலர் வின்சென்ட் மனோகரன், கொடைக்கானல் மக்கள் கல்வி மற்றும் செயல் இயக்குநர் பால் மைக்கேல் ராஜ், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் புதுச்சேரி இனாமுல் ஹசன், நீதி மற்றும் அமைதி மையத்தின் நிறுவனர், பொள்ளாச்சி எஸ்.தனராஜ் ராதை, ஈரோடு டாக்டர் ஜீவா அறக்கட்டளை நிறுவனர் ஜெயபாரதி ஆகியோருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விருது பெற்றவர்களில் அரசு டாக்டர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மறைந்த டாக்டர் லட்சுமி நரசிம்மனும் ஒருவர். அவர் சார்பாக அவரது மனைவி விருதைப் பெற்றுக்கொண்டார். ஆளுநர்கள் முதல் அனைத்தும் மோடி கையில் விருதுகளை வழங்கி பேசிய, நீதிபதி ஹரிபரந்தாமன், “விருது பெற்ற ஒவ்வொருவரும் தங்கள் துறைகளில் சமூக நீதியை நிலைநாட்ட தன்னலமின்றி களப்பணியாற்றுபவர்கள்”. என்றார். மேலும் அவர் தனது உரையில், “ஆளுநர்கள் உட்பட கிட்டத்தட்ட ஒன்றிய அரசின் ஒவ்வொரு நிறுவனமும் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளில் தான் உள்ளது என்று குற்றம் சாட்டினார். பல மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீடு எப்படி நிர்வாகத்திற்கு கடினமாக உள்ளது என்பதையும் அவர் விளக்கினார்.