மதுரை, ஜூலை 7- ஜூன் 10 மதுரையில் வலதுசாரி எதிர்ப்பு அரசியல் மாநாடு நடைபெறுகிறது என்று முன்னாள் எம்எல்ஏ முருகவேல் ராஜன் அறி வித்துள்ளார். மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவர்-முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு. கா. முருகவேல் ராஜன் மதுரையில் புத னன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய நாட்டில் நிலவும் வகுப்புவாத, மத வாத, பாஜக ,ஆர் .எஸ் .எஸ் மதவெறி ஆட்சி யை கண்டித்தும், ஒன்றிய அரசு குறிப்பிட்ட தனியார் முதலாளிகளிடம் ஒட்டுமொத்த இந்தியாவின் வளங்களையும் தாரை வார்த்து ஒரு மறைமுக அந்நிய பொருளா தார ஆதிக்கச் சூழலை உருவாக்கி வரு வதை கண்டித்தும் ஜூன் 10 சனிக்கிழமை யன்று மதுரை விரகனூர் பகுதியில் வலது சாரி எதிர்ப்பு அரசியல் மாநாடு மக்கள் விடு தலைக் கட்சி சார்பில் நடைபெற உள்ளது. இதில் திமுக மாநில விவசாய அணி செய லாளர்- தமிழ்நாடு அரசின் தில்லி பிரதி நிதி.ஏ .கே .எஸ். விஜயன், தமிழ்நாடு சிறு பான்மை நல வாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அதியமான், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு இந்திய குடியரசு தலைவரை அழைக்கா ததை கண்டித்தும், இந்தியா ஒரு சமயச் சார்பற்ற நாடு அத்தகைய நாட்டில் நாடாளு மன்ற திறப்பு விழாவில் செங்கோல் வைக் கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அந்த செங்கோலை நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து அகற்றவும் வலியுறுத்தியும் பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக் டர் கலைஞர் ஆகியோரால் சமூக நீதி கொள்கை இருப்பதால் பாஜக மோடி அர சின் தேர்தலுக்கான நாடகங்கள் தமிழ்நாட் டில் எடுபடாது, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டு வதற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பல சர்ச்சையான விஷயங்களை பேசி வரு கிறார். அவர் மீது சட்டப்படியான நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும், அவர் தொட ர்ந்து பொய் பிரச்சாரங்களை செய்து வரு கிறார். அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.