திருவில்லிபுத்தூர், ஏப்.8- அரசு அறிவித்த ஐந்து பவுன் நகைக்கடன் தள்ளுபடி தகுதியுள்ள அனைவருக் கும் வழங்கக் கோரி திரு வில்லிபுத்தூர் கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவல கம் முன்பு மக்களை திரட்டி துணை பதிவாளரிடம் மேல் முறையீடு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட தலைவர் விஜயமுருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொரு ளாளர் மனோஜ், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் திருமலை, ஒன்றியச் செய லாளர் சசிகுமார், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்தையா உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். பின்னர் துணைப்பதிவா ளரிடம் மனுக்கள் வழங்கப் பட்டன. போராட்டம் குறித்து விவாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜய முருகன் கூறும்போது, தமிழ்நாடு அரசு முதன் முதலாக அறி வித்தபோது எந்த ஒரு விதி முறையும் அறிவிக்க வில்லை. 5 பவுன் நகை மற்றும் அதற்கு குறைவாக வைத்துள்ள அனைவ ருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்து விட்டு தற்பொழுது ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து நகை கடன்கள் தள்ளுபடி மறுப்பது சரியல்ல; உடன டியாக தகுதியான நபர்கள் அனைவருக்கும் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.