districts

img

சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு

தேனி, மார்ச் 12- சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவில் காளைகளை அடக்கிய வீரர்களும் ,அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களும் பரிசுகளை தட்டி சென்றனர் .ஜல்லிக்கட்டில்  620  காளைகளும், 326 மாடு பிடி வீரர்களும்  கலந்து கொண்டனர்.  தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டி கிராமத்தில் உள்ள  ஏழைகாத்த அம்மன்,  வல்லடிகாரசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 12 ஞாயிறன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது .இதற்காக தேனி, மதுரை, திண்டுக்கல் சிவகங்கை, இராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார்  600க்கும் மேற்பட்ட காளைகள், 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.  போட்டியை பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய காளைகளை, களத்தில் உள்ள வீரர்கள் மல்லுக்கட்டி அடக்கினர். ஜல்லிக்கட்டு போட்டிக்காக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே தலைமையில் சுமார் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  20 காளைகளை அடக்கிய  கார்த்திக் என்பவர்   முதல் பரிசாக இருசக்கர வாகனத்தை பெற்றார் .18 மாடுகளைப் பிடித்து இரண்டாம் இடத்தை சாரதி என்பவர் பிடித்து பைக்கினை பரிசாக பெற்றார்.ஆண்டிச்சாமி என்பவரது காளை  சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இதில் கூடலூர் வடக்கு காவல்நிலைய காவலர் அழகர்சாமி , அய்யம்பட்டி சேர்ந்த அமர்,ஆண்டிபட்டி கரட்டுப்பட்டியை சேர்ந்த பரமசிவம் (50), மதுரை சேர்ந்த அன்புசெல்வம் (20)  ஆகியோருக்கு  மாடு முட்டியதில் படுகாயமடைந்தனர். அவர்களை முதலுதவி சிகிச்சைக்கு பின் தேனி  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.மாடுபிடி வீரர்கள், பார் வையாளர்கள் உட்பட 60 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.