சிவகாசி, ஆக.24- சிவகாசியில் பட்டாசுத் தொழில் துவங்கி 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நிகழாண்டு முழு வதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட வரவேற்புக்குழு அமைக்கப்பட் டுள்ளது. ‘குட்டி ஜப்பான்’ என பெருமை யுடன் அழைக்கப்படும் நகரம் விருது நகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஆகும். இதற்கு காரணம் இங்கு பட் டாசு, தீப்பெட்டி, அச்சு ஆகிய தொழில்கள் நிறைந்து காணப்படு கின்றன. இதனால், வேலைவாய்ப்பு கள் அதிகரித்துள்ளதோடு, மாவட் டத்தின் பொருளாதார முன்னேற்றத் திற்கு சிவகாசி முக்கிய பங்கு வகித்து வருகிறது. இதில் மிகவும் முக்கியத் தொழி லாகவும், முதன்மைத் தொழிலாக வும் சிறந்து விளங்கி வருவது பட்டா சுத் தொழிலாகும். சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் என மொத்தம் 1070 பட்டாசுத் தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றனர். இத்தொழிலால் நேரடியாகவும் மறை முகமாகவும் சுமார் 5 லட்சம் தொழி லாளர்கள் வேலைவாய்ப்பை பெற் றுள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசு போன்ற காரணங்களால் இத்தொழில் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியது. சிஐடியு-பட்டாசுத் தீப்பெட்டி தொழிலாளர் சங்கம், பட்டாசு உற்பத்தியாளர்கள், ஆலை உரிமையாளர்கள் ஆகியோர் தொடர்ந்து இணைந்து நடத்திய போராட்டத்தின் காரணமாக இத்தொழில் தற்போது வரை பாது காக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்ந்து வரும் பல்வேறு பிரச்ச னைகளை ஒற்றுமையுடன் எதிர் கொண்டு வருகிறது. இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் தீப்பெட்டி-பட்டாசுத் தொழிலின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது.
கடந்த 1922ஆம் ஆண்டு சிவகாசி யைச் சேர்ந்த அய்யநாடார், சண்முக நாடார் ஆகியோர் மேற்குவங்க மாநி லத்தில் உள்ள கல்கத்தா நகருக்குச் சென்று தீப்பெட்டி தயாரிக்கும் முறைபற்றி அறிந்து கொண்டு, சிவ காசிக்கு வந்து தீப்பெட்டித் தொழிலை துவங்கியுள்ளனர். நாளடைவில் இத்தொழில் மாவட் டம் முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான முக்கியத் தொழிலாக மாறியது. இதையடுத்து, மத்தாப்பு குச்சிகள், மத்தாப்புகள் தயாரிப்பது எனத் துவங்கி மிகப்பெரிய பட்டாசு ஆலை களும் தொடங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஏராளமான சார்புத் தொழில்கள் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடங் கப்பட்டது. வானம் பார்த்த பூமியான சிவகாசி, சாத்தூர், விருதுநகர் பகு திக்கு இத்தொழில்கள் பெரும் வரப் பிரசாதமாக அமைந்தன. தற்போது மகத்தான இத்தொழில் கள் துவங்கப்பட்டு, 100 ஆண்டுகள் நிறைவடையும் நிலையை அடைந் துள்ளது. எனவே, சிஐடியு-பட்டாசுத் தீப்பெட்டித் தொழிலாளர் சங்கம், பட் டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் இணைந்து நூற்றாண்டு விழாவை வெற்றிகர மாக கொண்டாட முடிவு செய்துள்ள னர். இதற்கான வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொருளாளர் ஜெபஜோதி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி.என்.தேவா துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.சி.பாண்டியன் விளக்கிப் பேசி னார். வரவேற்புக்குழுத் தலைவராக சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் ஏம்.எம்.எஸ்.ஜி.அசோகன், செயலா ளராக கே.முருகன், பொருளாளராக எம்.ஜெபஜோதி உட்பட 100 பேர் கொண்ட வரவேற்புக்குழு அமைக் கப்பட்டது. நூற்றாண்டு விழா துவக்க நிகழ்ச்சியாக அக்டோபர் 1-ல் மாபெ ரும் பொதுக்கூட்டம் நடத்துவது. மேலும், மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், மராத்தான், தொழிலாளர் சங்கமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது எனவும் முடிவு செய்யப் பட்டுள்ளது.