மதுரை, மே 25- மதுரை ஆண்டார் கொட்டா ரத்தில் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட வணிகர்குழு கல்வெட்டு கண்டுபிடிக் கப்பட்டது. இந்த கல்வெட்டு மதுரை கிழக்கு வட்டம் பாப்பாக்குடி கிராமம் ஆண் டார் கொட்டாரம் ஊராட்சியில் உள்ள வயலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து மேலமடை கிராம நிர்வாக அலுவலர் இளங்குமரன் அளித்த தகவலின் பேரில் மதுரை அரசு அருங்காட்சியகக் காப்பாட்சி யர் முனைவர்.மீ.மருது பாண்டியன் இக்கல்வெட்டை கண்டறிந்தார். இவ ரது அழைப்பை ஏற்று பாண்டிய நாட்டு வரலாற்று மைய ஆய்வா ளர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி ஆகியோர் இக்கல்வெட்டை மைப் படியெடுத்தனர். முனைவர் சொ.சாந்தலிங்கம் கல்வெட்டை படித்த ஆய்வு மைய செயலாளர் முனைவர் சொ.சாந்த லிங்கம் கூறியதாவது: கல்வெட்டுள்ள இக்கல்லை ஊர்மக்கள் முனியன் கல்லு என்று அழைக்கின்றனர். நான்கரை அடி உயரமுள்ள இக்கற்பலகையின் மூன்று புறமும் கல்வெட்டு வெட்டப் பட்டுள்ளது. மொத்தம் 47 வரிகளைக் கொண்டுள்ளது. இக்கல்வெட்டு முதல் ஆறு வரிகள் கிரந்த எழுத்துக் களில் சமஸ்கிருதத்தில் வணிகர் களின் மெய்க்கீர்த்தியைக் கூறுகிறது. இக்கல்வெட்டு சமஸ்தபுவனாசார்ய பஞ்ச சதவீரசாசனம் என்று இச்சாச னம் குறிப்பிடுகிறது. அதாவது ஐநூற்றுவர் என்னும் வணிகக்குழு வினர் அளித்த சாசனம் என்பது இதன் பொருள். இதில் வணிகர்கள் தங் களை அய்யப்பொழில் பரமேஸ்வரி யின் மக்கள் என்று தங்களைக் கூறிக் கொள்கிறார்கள். பல வணிகக் குழுக்கள் ஒன்று கூடி சமயத்தன்மை என்கிற தங்களது தொழில் தர் மத்தைச் சிறப்பாக நடத்துகின்றனர்.
நகரம், கிராமம், மணிக்கிராமம், கோழிக்குறிச்சி, கடிகைத்தாவளம், ஏறுசாத்து, இறங்குசாத்து (ஏற்றுமதி இறக்குமதி) வணிகர்களுமான திசையாயிரத்து ஐநூற்றுவர் என்ற குழுவினர் பறப்பு நாட்டுப் பிரிவுக்குள் அடங்கிய இளமைநல் லூர் என்ற ஊரைச் சோ்ந்த வணிக வீரர்கள் இவ்வூரில் ஒரு வணிகத்தாவ ளத்தை ஏற்படுத்தி காவல் புரிந்து வணிகர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்துள்ளனர். இளமைநல்லூர் என்பதற்கு நானாதேசி நல்லூர் என்றும் மற்றொரு பெயர் வழங்கப் பட்டுள்ளது. இளமைநல்லூர் என்பதே இன்று இளமனூர் என்று வழங்கும் ஊராக இருக்கலாம். பதி னெட்டுபட்டிணத்து பதினெண்விசை யத்தார் என்ற பெருங்குழுவினர் வணிகவீரர்களைக் கொண்டு வீரத் தாவளம் அமைத்து வணிகம் செய்துள்ளனர். தாவளம் என்பது காவல் அரண்மிக்க தங்குமிடமாக வும், சரக்குப் பெட்டகம் (குடோன்) ஆகவும் செயல்பட்ட இடமாகும். மிக முக்கியத்துவம் வாய்ந்த இக்கல் வெட்டு மதுரைக்கு அருகில் கிடைத்தி ருப்பது வரலாற்று அறிஞர்களுக்கு வியப்பைத்தந்துள்ளது. இதற்கு முன்னால் நத்தம், கோயில்பட்டி, சத்தி ரபட்டி, சிவகங்கை மாவட்டம் திரு மலை, பிரான்மலை போன்ற இடங்க ளில் இத்தகைய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. தற்போது கிடைத் துள்ள இக்கல்வெட்டு மிகுந்த முக்கி யத்துவம் வாய்ந்ததாக உள்ளது. கி.பி.13ஆம் நூற்றாண்டில் வணி கர்கள் தன்னிச்சையாக அரசர்களின் ஆதரவை எதிர்நோக்காமல் செயல்பட்டுள்ளனர் என்பதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.