districts

img

90 கோயில்கள், கல்லூரி, பள்ளிக்கூடங்களை கண்காணிக்க வேண்டிய குழித்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் பூட்டிக் கிடக்கும் அவலம்

நாகர்கோவில், மார்ச் 6- தமிழ்நாடு அறநிலையத்துறை பொறுப்பில் கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் 490 கோயில்கள் உள்ளன. இவை ஒரே ஒரு செயல் அலுவலரின் கீழ் செயல்படுகின்றது. கன்னியாகுமாரி மாவட்ட திருக்கோவில்கள் அலுவலகம் சுசீந்திரத்தில் செயல்படுகிறது. இந்த கோயில்கள் குழித்துறை, பத்மநாபபுரம், நாகர்கோவில், பூதப்பாண்டி, செங்கோட்டை என 5 தொகுதிகளாக பிரிக்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு கண்காணிப்பா ளர் உள்ளார். குழித்துறை தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த் பொறுப்பில் மிக முக்கியமான திரு வட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் திருமலை, திருப்பரப்பு, திருநட்டாலம், ஆகிய சிவாலயங்கள், தொல்லியல் துறையால் பராம ரிக்கப்பட்டு வரும் பார்த்தசாரதி திருக்கோயில் பார்த்திப புரம், சிதறால் மலைக் கோவில், ஆனையடி பண்ணை, தேவி குமாரி மகளிர் கல்லூரி, திருப்பரப்பு உயர்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. குழித்துறையில் உள்ள தொகுதி கண்காணிப்பாளர் அலுவலகம் நீண்ட காலமாக திறக்கப் படவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். வாரம் தோறும் திருக்கோவில்களை ஆய்வு  செய்து குறைகளை கண்டறிந்து நிர்வர்த்தி வேண்டிய திருக்கோவில் கண்காணிப்பாளர் தன்னுடைய நாகர்கோவில் உள்ள வீட்டை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆக மாற்றி யுள்ளார். அவரை பின்பற்றி துணை தொகுதி அலுவலராக பணி புரியும் ஸ்ரீகாரியங்கள் (மேலா ளர்கள்) உள்ளிட்ட சில அலுவலர்களும் கோயில் களை பராமரித்து நிர்வகிப்பதில் அலட்சியம் காட்டுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். பக்தர்கள், பொதுமக்கள்  திருக்கோவில் சம்பந்த மாக ஏதாவது காரியங்களுக்கு கண்காணிப்பா ளர் அலுவலகம் நாடினால் திறக்கப்படாத அலு வலகத்தை பார்த்து திரும்பி போக வேண்டிய நிலைமை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை பயன்படுத்தி சில தனிநபர்களும் இயக்கங்களும் கோயில்களில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு கண்காணிப்பாளர் மறைமுக ஒத்துழைப்பு வழங்குவதாக பக்தர்கள் கூறுகின்றது. திருக் கோவில் சொத்துக்களையும் வருமானத்தையும் அந்நியர்கள் கொள்ளை அடிக்க உதவி வருவ தாகவும், இது நிர்வாகத்தையும் அரசையும் ஏமாற்றும் செயல் எனவும் அவர்கள் கூறு கின்றனர். ஏற்கனவே இவர் மீது ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.