சர்வதேச நீதிமன்றத் தில் தென் ஆப்பிரிக் கா, இஸ்ரேல் மீது தொடுத் துள்ள வழக்கு விசாரணை யின் முதல் நாள் வாதம் வியா ழனன்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா சார்பில் பேசிய வழக்கறிஞர்கள் பாலஸ்தீன மக்களை இஸ் ரேல் இனப்படுகொலை செய்து வருகிறது என குற்றம் சாட்டினர். மேலும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். இந்த போர் நீண்டகால மாக பாலஸ்தீனர்களின் மீது இஸ்ரேல் நடத்தி வந்த ஒடுக்கு முறையின் விளைவு. இனப்படுகொலை செய்வதை யாரும் முன் கூட்டியே அறி வித்து நடத்த மாட்டார்கள்.ஆனால் இந்த நீதிமன்றம் அதை உறுதிப்படுத்திக் கொள்ள கடந்த 13 வார காலங் களில் இஸ்ரேல் ராணு வத்தால் நடத்தப்பட்ட சம்ப வங்கள், அதன் நோக்கத்தை மறுக்க முடியாத தன்மையில் காட்டுகிறது. இந்த சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை தவிர வேறு எதுவும் இந்த துன் பத்தை நிறுத்தாது என தென் ஆப்பிரிக்க வழக்கறிஞர் அடிலா ஹாசிம் பேசியுள்ளார்.