districts

img

விவசாயிகளுக்கு மின் இணைப்புக் கொடுப்பதில் முறைகேடு

மதுரை, ஜூலை 25- மதுரை மாவட்டத்தில் மின் இணைப்புக் கொடுப்பதில் முறை கேடு நடந்துள்ளது. இதுகுறித்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு உத்தரவிட வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பி. இளங்கோவன் ஆட்சியரி டம் அளித்துள்ள புகார் மனு: தமிழ்நாடு மின்சார வாரியம் திருத்தியமைக்கப்பட்ட சுயநிதித் திட்டத்தின் கீழ் 2009-ஆம் ஆண்டு ரூ.25,000, ரூ.50,000 திட்டத்தின் கீழ்  விவசாய பம்புச் செட்டுக்கு மின்  இணைப்பு கேட்டுப் பதிவு செய்த விவசாயிகளுக்கு கடந்த 2021-ஆம்  ஆண்டு டிசம்பர் 1-அம் தேதி அன்று  மின்னிணைப்பு கொடுப்பதற்கு செலவாகும். மதிப்பீட்டு தொகை யை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென்று நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  

இதையடுத்து சில விவசாயிகள் ஒரு வாரத்திற்குள் மதிப்பீட்டுத் தொகையை செலுத்தியுள்ளனர். இதற்கிடையில் 2013-ஆம் ஆண்டு வரை மின்னிணைப்பு கேட்டு பதிவு  செய்த விவசாயிகள் அனைவருக் கும் இலவசமாக மின்னிணைப்பு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்  பட்டது. இதைப் பயன்படுத்தி மின்  வாரிய அதிகாரிகள் சிலர், செல வாகும் மதிப்பீட்டுத் தொகையில் ஒரு பகுதியை விவசாயிகளிடம் பெற்றுக்கொண்டு மின்னிணைப்பு கொடுத்துள்ளனர். இதில் ஊழல் நடந்துள்ளது.  மேலும் பணம் கட்டிய விவசாயி கள் சிலருக்கு இன்னும் மின் இணைப்புக் கொடுக்கவில்லை. மின்வாரிய அதிகாரிகளைக் கேட்  டால் மின்னிணைப்பு கொடுப்பதற் கான மின் கம்பம், வயர் அரசிடமி ருந்து வரவில்லை என்கிறார்கள். விவசாயிகள் வட்டிக்கு வாங்கி மதிப்பீட்டு தொகையை கட்டி எட்டு மாதமாகியும் மின்னிணைப்புக் கொடுக்கவில்லை. பணம் கட்டிய  விவசாயிகளுக்கு பணத்தை திருப்பிக் கொடுத்து இலவச மின்  இணைப்பு வழங்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் இணைப்பு  கொடுத்ததில் முறைகேடு நடந்  துள்ளது. மின் வாரிய அதிகாரி கள் பெரும் பணப்பலன் அடைந் துள்ளனர் எனக் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் மின் இணைப்புக் கொடுப்பதில் முறை கேடு நடந்துள்ளது. இதுகுறித்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு உத்தரவிட வேண்டு மென பாதிக்கப்பட்ட விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.