கடும் ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.2000: உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
நாகர்கோவில், ஜன. 2- 75 சதவிகிதம் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டோர் உள்ளிட்ட கடும் ஊனமுற்றோர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாதம் ரூ.2000/- மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெற வேண்டி விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில், வருவாய்த்துறை சமூக பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் மாதம் ரூ.1000/- உதவித்தொகை பெறுபவர்கள் அல்லது இதுநாள் வரை உதவித்தொகை பெறாதவர்களில், 75 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் கடுமையாக உடல் இயக்கம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 40 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மனவளர்ச்சி குன்றியவர்கள், மனவளர்ச்சி குன்றிய/மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்,
தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட வர்கள், பார்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தண்டுவட மரபு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாதம் ரூ.2000/- மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் பயனாளிகளின் விபரப்பட்டியலில் ஆதார் எண்ணினை இணைத்திடவும் மற்றும் 2022ம் ஆண்டிற்கான ‘வாழ்நாள் சான்று – Life Certificate” ஏப்ரல் 2022ம் மாதத்திற்கு பின்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சிறப்புப்பள்ளிகள், இல்லங்கள் மற்றும் அனைவ ருக்கும் கல்வி இயக்கம் மூலமாக இதுநாள் வரை வழங்காதவர்கள் மட்டும் சமர்ப்பித்திடவும், அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 06.01.2023 முதல் 11.01.2023 (07.01.2023, 08.01.2023 தவிர) வரையான தேதிகளில் நடைபெறும் முகாமில் மாற்றுத்திற னாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், ங்கி புத்தக நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ருனுஐனு அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் பாதுகாவலர்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்து மாதம் ரூ.2000/- உதவித் தொகை பெற்று பயன் பெறலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர் - நடத்துநர் மீது தாக்குதல் ஊராட்சி ஒன்றிய தலைவரின் கணவர் தலைமறைவு
அருமனை, ஜன.2 - கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே முக்கூட்டுகல் பகுதியில் அரசுபேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீதும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்திய ஊராட்சி ஒன்றிய தலைவரின் கணவர் உட்பட 6 பேர் தலைமறைவாகிவிட்டார். மார்த்தாண்டத்தில்-மஞ்சாலு மூடு வழியாக முக்கூட்டுகல் செல்லும் பேருந்தில் ஓட்டுனராக முதப்பன் கோடு பகுதியை சேர்ந்த ரெஜிகுமார் 44 என்பவரும்,நடத்துனராக முக்கூட்டுகல் வெட்டு விளையை சார்ந்த கனகராஜ் 48 என்பவரும் பணி புரிகின்றனர் . இந்த பேருந்து திங்கள் மதியம் சுமார் 2 மணி அளவில் முக்கூட்டுகல் நோக்கி சென்று கொண்டிருந்தது. பின்னால் வந்த ‘இரண்டு இருசக்கர வாகனங்கள் பேருந்தின் முன்னும் பின்னுமாக சென்று கொண்டு இருந்ததாக தெரிகிறது. முக்கூட்டுகல் சந்திப்பில் தங்களுடைய வாகனத்தை நிறுத்தி ஓட்டுனருடன் தகராறு ஈடுபட்டுள்ளனர். பின்னர் பேருந்துக்குள் நுழைந்து நடத்தினர் கனகராஜை சரமாரியாக தாக்கி கையில் இருந்த பணப்பையை கிழித்து எறிந்து மட்டுமல்லாமல் அதில் இருந்த பயண சீட்டுகளையும் பிடுங்கி கிழித்து எறிந்துள்ளனர். பயணிகள் எதற்காக தாக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு பயணிகளையும் கெட்ட வார்த்தைகள் கூறி தாக்கியுள்ளனர். இதை அறிந்தஅப்பகுதி மக்கள் திரளாக கூடியதும் சம்பந்தப்பட்ட ஆறு பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டுள்ளனர். சம்பவம் அறிந்த அருமனை போலீசார் வந்து விசாரித்த போது மேற்புறம் ஊராட்சி ஒன்றிய தலைவரின் கணவர் ராஜு என்ற செல்வராஜ் , ஜிஜேஸ், நந்து, கயிலு மற்றும் இரண்டு பேரும் என தெரிய வந்தது.இவர்களை அருமனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளாகிய கனகராஜ் அருமனை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
புத்தாண்டில் போக்குவரத்து விதிமீறல்: 300 வழக்குகள் பதிவு
திருநெல்வேலி, ஜன. 2- நெல்லை மாவட்டத்தில் புத்தாண்டு அன்று இரவு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் புத்தாண்டு அன்று அசம்பா விதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ப தற்காக மாவட்ட எஸ்.பி.சரவணன் உத்தரவின் பேரில் 700-க்கும் அதிகமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மக்கள் கூடும் இடங்களில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலை யில் புத்தாண்டு அன்று இரவில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு இருந்தனர். அப்போது போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக சுமார் 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தொழிலதிபரிடம் ரூ.37 லட்சம் மோசடி: நைஜீரியாவைச் சேர்ந்தவர் கைது
தூத்துக்குடி, ஜன.2 தூத்துக்குடியில், ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ஆன்லைன் மூலம் ரூ.37 லட்சம் மோசடி செய்த நைஜீரிய நாட்டுக் காரரை காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி யை சேர்ந்தவர் செலஸ்டின். இவருடைய மகன் பனிமய கிளாட்வின் மனோஜ் (38). இவர் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய வாட்ஸ்-அப்புக்கு ஒரு தகவல் வந்தது. அந்த தகவலில் தோகா நாட்டில் உள்ள ஒரு தனியார் கால்நடை பாதுகாப்பு நிறுவனத்து க்கு, இந்தியாவில் மராட்டியம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் உள்ள 2 தனியார் நிறுவனங்களில் இருந்து கால்நடைக்கு தேவையான மருந்துகளை வாங்கி அனுப்பக் கோரி `லிங்கு’டன் கூடிய ஒரு தகவல் வந்துள்ளது. பனிமய கிளாட்வின் மனோஜ், அந்த லிங்கை திறந்தார். இதனை தொடர்ந்து தோகாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவது போன்று சிலர் பேசி உள்ளனர். இதனை நம்பிய பனிமய கிளாட்வின் மனோஜ், மராட்டியம், சிக்கிம் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்க ளை தொடர்பு கொண்டு உள்ளார். அதன்பேரில் அந்த நிறுவனத்தில் இருந்து சிறிது மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்ட தாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அதிக அளவில் கொள்முதல் செய்வதற்கு அவ்வப்போது சில சான்றிதழ் (கிளியரன்ஸ்) பெற வேண்டும் என்று கூறி மராட்டியம், சிக்கிம் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பேசி பணம் கேட்டு உள்ளனர். அதன் பேரில் பனிமய கிளாட்வின் மனோஜ் பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.36 லட்சத்து 98 ஆயிரத்து 800-ஐ அனுப்பி உள்ளார். அதன்பிறகு பணம் பெற்ற நிறுவனங்கள் மருந்தை அனுப்பி வைக்கவில்லை. இத னால் சந்தேகம் அடைந்த பனிமய கிளாட் வின் மனோஜ் அந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டும் எந்தவித பலனும் இல்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் குற்றப் பிரிவு காகாவல் ஆய்வாளர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து நடத்திய விசாரணையில், நைஜீரியா நாட்டை சேர்ந்த ஈசி பிடலிஸ் நுபூசி (42) என்பவர் மும்பையில் தங்கி இருந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர் போலியாக வாட்ஸ்-அப், மின்னஞ் சல் முகவரிகளை உருவாக்கி, அதன்மூலம் போலி விளம்பரங்களை தயாரித்து ஏற்று மதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வரு பவர்களை கண்டறிந்து அனுப்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது கூட்டாளிகள் மூலம் பல்வேறு இடங்களில் இருந்து தொடர்பு கொண்டு பணத்தை பெற்று மோசடியில் ஈடு பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் மும்பைக்கு சென்றனர். அங்கு நவிமும்பை உல்வே நோடு பகுதியில் ஒரு வீட்டில் தங்கி இருந்த ஈசி பிடலிஸ் நுபூசியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப்-டாப், 3 செல்போன்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஈசி பிடலிஸ் நுபூசியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இதேபோன்று பலரிடம் பணம் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இந்த மோசடி வழக்கில் மேலும் பலர் ஈடுபட்டு இருப்ப தையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து ஈசி பிடலிஸ் நுபூசியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
தேனி, ஜன.2- வைகை அணையிலிருந்து டிச.29-ஆம் தேதி இராம நாதபுரம், சிவகங்கை மாவட்ட மூன்றாம் பூர்வீகப் பாச னத்திற்காக அணையிலிருந்து 2,500 கன அடி நீர் திறக்கப்பட்டது. திங்களன்று காலை பாசனத்திற்கான நீர் திறப்பு 800 கன அடி நீர் அதிகரித்து 3,300 கன அடி யாக உயர்த்தப்பட்டது. மதுரை மாநகர் குடிநீருக்காக 69 கன அடி நீர் சேர்த்து 3,369 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. அணைக்கு 472 கன அடி நீர் வருகிறது. நீர்மட்டம் 61.91 அடியாக உள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140.60 அடியாக உள்ளது. அணையிலிருந்து 511 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்து 271 கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.85 அடியாக உள்ளது. 68 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 124.97 அடியாக உள்ளது. 21 கன அடி நீர் வருகிறது. 27 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தொடங்கியது
மதுரை, ஜன.2- தை பொங்கலையொட்டி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கிவிட்டன. அவனியாபுரம் ஜன. 15, பாலமேட்டில் ஜன.16, அலங்காநல்லூரில் ஜன.17- ஆகிய தேதிகளில் ஜல்லிக் கட்டுப் போட்டிகள் நடக்க உள்ளன. ஜல்லிக்கட்டு தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் அழைப்பிதழ் கொடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் மதுரை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சிவபிரசாத் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதற் கட்ட ஆய்வு பணி நடைபெற்றுள்ளது. நான்கு தினங்களில் மீண்டும் ஆய்வு நடத்தப்படும். பாலமேடு ஜல்லிக்கட்டு பாதுகாப்புப் பணியில் ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர் என்றார்.
அல்-அமீன் பள்ளில் பாடப் புத்தகங்கள் வழங்கல்
மதுரை, ஜன.2- அரையாண்டு விடுமுறைக்குப் பின்னர் தமிழகம் முழு வதும் பள்ளிகள் திங்களன்று திறக்கப்பட்டன. மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி மாணவர் களுக்கு மூன்றாம் பருவகால பாடப்புத்தகங்கள் வழங்கப் பட்டன. ”அன்றைய பாடங்களை அன்றே படிப்போம். ஆண்டுத் தேர்விற்கு ஆயத்தமாவோம்” என்று மாண வர்கள் புத்தாண்டு உறுதிமொழி ஏற்றனர். நிகழ்வில் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
கழிவு பட்டாசுகள் வெடித்ததில் இரு மாணவர்களுக்குத் தீக்காயம்
சிவகாசி, ஜன.2- சிவகாசி அருகே உள்ளது தாயில்பட்டி. இங்குள்ள கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த வைரவன் (14), வேலா யுதம் (9) இருவரும் மாணவர்கள். இருவரும் ஓடையோரம் பட்டாசுகளை வெடித்து விளையாடிக் கொண்டிருந்துள்ள னர். அப்போது இவர்கள் வெடித்த பட்டாசு அருகில் உள்ள கழிவு பட்டாசு குவியலில் விழுந்துள்ளது. இதை யடுத்து கண் இமைக்கும் நேரத்தில் அவையனைத்தும் வெடித்துச் சிதறியது. இதில் வைரவன்(14), வேலாயுதம் (9) இருவரும் தீ காயமடைந்தனர். அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெம்பக்கோட்டை காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
சாலை அமைப்பதில் முறைகேடு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை, ஜன.2- மதுரை மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாச்சாமி மாத்தூர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை மேற் கொள்ளாமல் பணி முடிந்ததாக லட்சக்கணக்கில் முறை கேடு நடந்துள்ளதாகக் கூறி தாக்கல் செய்த வழக்கில் அரசு தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கள் கிருஷ்ணகுமார். விஜயகுமார் ஆகியோர் உத்தர விட்டுள்ளனர். வழக்கு விசாரணையை நான்கு வாரத் திற்கு ஒத்திவைத்துள்ளனர். மனுதாரர் முறை கேட்டில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டம்- குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வும் வலியுறுத்தியுள்ளார்.
சாதியைச் சொல்லித் திட்டிய இருவர் கைது
புதுக்கோட்டை, ஜன.2- புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துடையூர் கிராமத்தில், புத்தாண்டு தினத்தையொட்டி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த கமலஹாசன்(27), சரத் குமார் (30) ஆகியோர் அங்கிருந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பைரவ் விஷ்ணு, மணிகண்டன் ஆகியோரை சாதியைச் சொல்லி திட்டி தாக்கியுள்ளனர். புகாரின்பேரில் கமலஹாசன், சரத் குமார் ஆகியோரை காவல்துறை யினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதிமுக ஆட்சியில் கலைமாமணி விருது வழங்கியதில் முறைகேடு?
விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜன.2- 2019-2020-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி யில் வழங்கப்பட்ட கலைமாமணி விருது களைத் திரும்பப் பெற உத்தவிடக் கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை யில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசு சார்பாக இயல், இசை, நாடகமன்றம் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மன்றம் சார்பாகச் சிறந்த கலைஞர்களுக்குத் தமிழ்நாடு அரசு கலை மாமணி விருது என்ற உயரிய விருதை வழங்கி வருகிறது. இந்த விருது 18 வய திற்குக் கீழ், 19 முதல் 35 வயது வரை, 36 முதல் 50 வயது வரை, 51 வயது முதல் 60 வயது வரை, 61 வயதிற்கு மேலுள்ளவர்கள் என ஐந்து பிரிவில் அரசு இந்த விருதை வழங்கி வருகிறது. கடந்த 2019-2020-ஆம் ஆண்டிற்கான விருது, 2021-ஆம் ஆண்டு இரண்டாவது மாதம் வழங்கப்பட்டது. இந்த விருதிற்கு நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளது. அவசரகதியில் அர சாணை பிறப்பிக்கப்பட்டு விருதிற்கு உரிய வர்களைத் தேர்வு செய்யாமல், பணம் பெற்றுக் கொண்டு விருது வழங்கப்பட்டுள் ளது. இந்த விருது வழங்கியதை ரத்துச் செய்ய வேண்டும். மீண்டும் தேர்வுக் குழு அமைத்து உரியநபர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஹா தேவன், சத்திய நாராயணப் பிரசாத், அமர்வு. நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை யும், சந்தேகங்களையும், இந்த எழுப்பி யிருந்தனர். அதற்குத் தமிழ்நாடு அரசு சார் பில், கடந்த ஆட்சியின் போது இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதில் ஏதே னும் முறைகேடுகள் உள்ளதா என்பது குறித்துத் தற்போது குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பால முருகன் என்ற பலமுருகப்பாண்டி ஆஜ ராகி அதற்கான சான்றுகளைச் சமர்ப்பித் தார். அவசரகதியில் வழங்கப்பட்டதால் கலைமாமணி விருது சான்றிதலில் தலை வர்கள் கையெழுத்து இல்லை எனவே விருதுகளை ரத்துச் செய்ய வேண்டும் என்றார். இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திங்களன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், கலைமாமணி விருது வழங்கிய குற்றச் சாட்டில் முறைகேடுகள் நடைபெற்றுள் ளதா என்பது குறித்துத் தேவைப்படும் பட்சத்தில் உரிய தேர்வுக் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். விருதுகள் வழங்கப் பட்டவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கி அவர்களிடம் விசாரணை மேற் கொண்டு உரிய ஆய்வு நடத்தி, பொருத்த மான முடிவை தமிழ்நாடு அரசு எடுக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
இராமநாதபுரம்: 3 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிப்பு இழப்பீடு, காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தல்
இராமநாதபுரம், ஜன.2- வறட்சியால் சுமார் 3 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் நிலை இராம நாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. எனவே வறட்சி மாவட்டமாக அறிவித்து உரிய இழப்பீடு வழங்கவும் காப்பீட்டுத் தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள் ளது. இது தொடர்பாக மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு கூறியிருப்பதாவது:- இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு வேளாண் பருவத்தில் சுமார் 3.25 லட்சம் ஏக்கரில் நெல், சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் விவசாயம், சுமார் 5 ஆயிரம் ஏக்க ரில் சிறுதானியம்-பயறு வகைப் பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளது. நெல் வளர்ந்து பொதி பருவத்தில் உள்ள நிலையில் வடகிழக்குப் பருவமழை மாவட்டம் முழுவதும் தூரல் மழையாகவே பெய்தது. இது விவசாயத்திற் குப் பயன்படவில்லை. புயல் அறிவிப்பு வெளியிட்ட காலத்தி லும் கூடப் போதிய மழை பெய்யவில்லை. இதனால் நெல் கருகி சாவியாகிவிட்டது. தொண்டி, சிக்கல், தேரிருவேலி, நயினார் கோவில் பிர்காக்கள் உட்படப் பல பகுதி களில் கருகிய பயிர்களைக் கால்நடைகள் மேய்கின்றன. இதரப் பகுதியிலும் நெல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வைகை பாசனப் பகுதி கண்மாய்கள், இராமநாத புரம் பெரியகண்மாய்த் தவிர மற்ற கண்மாய் கள் நிரம்பவில்லை. ஏக்கருக்கு ரூ 20 ஆயி ரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்த விவசாயிகள் செய்வதறியாது மனவேத னையில் உள்ளனர். கடந்த ஆண்டுத் தொடர்மழையால் கதிர் அறுவடை செய்ய முடியாமல் மாவட்டத் தில் பல ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டது. தற்போது வறட்சியால் சுமார் 3 லட்சம் ஏக்கர் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்க ருக்கு ரூ 30 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்கவேண்டும். பயிர்க் காப்பீட்டுத்திட் டத்தின் மூலம் 100 சதவீத இழப்பீடு கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றார்.