districts

img

சப்ளைகோவின் அரிசி வண்டி அறிமுகம் மானிய விலையில் வழங்க ஏற்பாடு

திருவனந்தபுரம், நவ. 2- பொதுச் சந்தையில் அரிசி விலையைக் கட்டுப்படுத்துவதன் ஒரு பகுதியாக, கேர ளத்தில் சிவில் சப்ளைஸ் அரிசி வேன் செயல்படத் துவங்கியது. பாளையம் மார்க்கெட் முன்பு உணவுத் துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் கொடிய சைத்து துவக்கி வைத்தார். திருவனந்த புரம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு. கண்ணூர், காசர்கோடு ஆகிய இடங்களில் அரிசி வண்டிகள் புதனன்று (நவ.2) ஓடத் தொடங்கின. கொல்லம், பத்த னம்திட்டா, கோட்டயம் மற்றும் ஆலப்புழா  மாவட்டங்களில் அடுத்த நாட்களில் தொடங்கும். பல்பொருள் அங்காடிகள் இல்லாத தாலுகா மற்றும் பஞ்சாயத்து மையங்களில் சப்ளைகோவின் மாவேலி ஸ்டோருடன் இணைந்த அரிசி வண்டிகள் ஓடுகின்றன. இது மாநிலத்தில் 500 மையங்களை சென்றடையும். ஒரு தாலுகாவில் தலா இரண்டு நாட்கள் என்ற முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரிசி வாங்க ரேஷன் கார்டு வேண்டும் என்றார் அமைச்சர். ஜெயா, குறுவை, மட்டை, பச்சரிசி என நான்கு வகை அரிசி வாங்கலாம். அனைத்து அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்கப்படும். ஜெயா அரிசி ரூ.25, குறுவை ரூ.25, மட்டை ரூ.24, பச்சரிசி ரூ.25 ஆக உள்ளது. நான்கு பொருட்களு டன் ரேஷன் கார்டுக்கு 10 கிலோ அரிசி. ஒரு கிலோ, 10.90 ரூபாய் வீதம், ரேஷன் கடை மூலம், வெள்ளை மற்றும் நீல அட்டைக ளுக்கு, எட்டு கிலோ அரிசி வழங்கும் பணியும் துவங்கப்பட்டுள்ளது.