districts

கார்ப்பரேட்களுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக அரசை ‘இந்தியா’ கூட்டணி வீழ்த்தும்

கார்ப்பரேட்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒன்றிய பாஜக அரசை நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வீழ்த்தும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். ஞாயிறன்று போடியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

பாஜக ஆட்சி கடந்த 10  ஆண்டுகளில் மதச்சார்  பின்மை, கூட்டாட்சி தத்  துவம், ஜனநாயகம் ஆகிய வற்றை தகர்த்து வருகிறது. நாடாளு மன்றத்தில் 146 எதிர்க்கட்சி உறுப்பி னர்களை இடைநீக்கம் செய்து விட்டு 4 முக்கிய மசோதாக்களை நிறைவேற்றி, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது. தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஆணையர் நியமன குழுவில் பிர தமர், எதிர்க்கட்சி தலைவருடன், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யை நியமிக்க வேண்டும் என தெரி வித்தது. அதற்கு மாறாக பிரதமர்,  எதிர்க்கட்சி தலைவர், பிரதமர்  பரிந்துரைக்கும் ஒரு அமைச்சர் குழு வில் இடம்பெறுவார் என மசோதா வை நிறைவேற்றியுள்ளனர். இதிலி ருந்து பிரதமர் யாரை தேர்தல் ஆணை  யராக நியமிக்க விரும்புகிறாரோ அவரே தேர்தல் ஆணையராக வர  முடியும் என மாற்றி விட்டனர்.

நாடாளுமன்றத்தில் 146 உறுப்பி னர்கள் செய்த தவறு என்ன? பாஜக எம்பி பரிந்துரையின் பேரில் நாடா ளுமன்றம் சென்ற இருவர் புகைக்  குப்பிகளை வீசி எறிந்து கலகம்  செய்தது குறித்து அறிக்கை கேட் டது குற்றமா? கார்ப்பரேட்களுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி செய்யும் இத்தகைய அரசை வரும் நாடா ளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வீழ்த்தும்.

அமைச்சர் நிர்மலாவிற்கு கண்டனம் 
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், தில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக வெள்ளப்பாதிப்பை தேசிய பேரிடர்  என அறிவிக்க முடியாது என தமி ழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்க மறுத்து ஆணவத்தோடு பேசியுள்ளார். இதனை மார்க்சிஸ்ட்  கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சுனாமி 2004 ஆம் ஆண்டு வந்தது. தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்  டம் 2005 ஆம் ஆண்டு நிறைவேற்றப்  பட்டது. அந்த சட்டப்படி புயல், வெள்  ளத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த அதிமுக, திமுக  ஆட்சியில் நிவாரண நிதியாக ரூ. 1லட்சம் கோடி கேட்கப்பட்டதில் இதுவரை ரூ.4 ஆயிரம் கோடி  மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்  ளது. தூத்துக்குடி, நெல்லை உள்  ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழக மக்களை பற்றி கவலை கிடையாது. ஒன்றிய அரசுக்கு கூடுதலாக ஜிஎஸ்டி வரி  செலுத்தும் மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. தற்பொழுது தமிழ கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பிற்கு போதிய நிதியை வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது. தமிழ்நாட்டை ஒன்றிய பாஜக அரசு  வஞ்சித்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித் தார்.

பேட்டியின் போது மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் டி.வெங்கடேசன், இ.தர்மர், சி. முனீஸ்வரன், தாலுகாச் செயலா ளர் எஸ்.செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பெரியார் வாழ்ந்த காலத்தை விட தற்போது அதிகம் தேவைப்படுகிறார்

தனது வாழ்நாள் முழுவதும் சாதி, மத பேதமற்ற சமூகத்தை உரு வாக்க தந்தை பெரியார் அயராது  போராடினார். அவர் எந்த லட்சியத்திற் காக போராடினாரோ அதற்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. மதத்தை ஆயு தமாக வைத்து ,மதவெறியூட்டி தேசத்தை  இந்து ராஷ்டிரமாக மாற்ற காவிக்கூட்டம் முயற்சிக்கிறது. நாங்கள் மதத்திற்கு எதி ரானவர்கள் அல்ல.மதத்தை அரசிய லுக்கு பயன்படுத்துவதைத்தான் எதிர்க் கிறோம்.

ஆர்எஸ்எஸ் வழிகாட்டலில் இயங்கி  வரும் பாஜக அரசு கடந்த 10 ஆண்டு களில் இந்துத்துவாவை படிப்படியாக அமலாக்கி வருகிறது. காந்திக்கும், பெரி யாருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந் தன. எனினும் காந்தி இறந்தவுடன் பெரி யார் தனது இரங்கல் உரையில் இந்தியா வை காந்தி தேசம் என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார் .

அண்ணல் அம்பேத்கர் அரசியல் சட்டத்தை உருவாக்கி நிறைவேற்றிய பின்னர், அவர் ஆற்றிய உரையில், சிறந்த அரசியல் சட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் .அதில் மதச்சார்பின்மை கோட்பாடு இருக்கிறது. ஜனநாயகம் இருக்கிறது, கூட்டாட்சிக் கோட்பாடு இருக்கிறது. சுய சார்பு பொருளாதாரக் கோட்பாடு இருக்கிறது .ஆனால் இந்த  அரசியல் சட்டம் நிலைத்து நீடிப்பது என்பது யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்  பதை பொறுத்து உள்ளது என்று எச்ச ரிக்கை செய்தார். நல்லவர்கள் அதிகா ரத்திற்கு வந்தால் சட்டம் அமலாக்கப் படும், கெட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் தகர்த்து விடுவார்கள் என்றார் . தகர்க்கும் வேலையைத்தான் பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது.

போடியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து ஜி.ராமகிருஷ்ணன் பேசியது...