இணைய வழியில் பணமோசடி
சிவகாசி, மே 30- சிவகாசியைச் சேர்ந்த சங்கர நாராயணன் என்பவ ருக்கு வங்கிக் கணக்கு எண்ணோடு சேர்த்து பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறி அழைப்பு வந்துள்ளது. பின்பு, அதற்கென ஒரு குறுஞ்செய்தி வந் துள்ளது. இதை சங்கர நாராணயன் அந்த எண்ணுக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, அவரது வங்கிக் கணக் கில் இருந்த ரூ.2லட்சத்து 30 ஆயிரம் பணம் எடுக்கப் பட்டது. இதுகுறித்து சங்கர நாராயணன் விருதுநகர் சைபர் கிரைம் காவல் துறையில் புகார் அளித்தார். அதன்பேரில், விசாரணை நடத்தினர். சங்கர நாராயணன் வங்கிக் கணக்கி லிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரமோத் குமார், பினோத் குமார் ஆகியோரின் கணக்கில் பணம் வரவாகியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் இருவரும் பல இணையதள பண மோசடி செய்தது தெரியவந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஓட்டுநர் மீது தாக்குதல்
திருவில்லிபுத்தூர், மே 30- திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி மூவரை வென்றான் கீழ் ஊரில் வசிப்பவர் ராமராஜன் (40) இவர் காடனேரி மொட்டை மலையில் உள்ள கல்குவாரியில் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் லாரியில் கற்களை ஏற்றிக்கொண்டு வரும்போது அய்யனார்புரத்தைச் சேர்ந்த கவின்குமார் (21) லாரியை வழிமறித்து முன்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியுள் ளார். தடுக்கச் சென்ற ராமராஜனை கல்வீசி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நத்தம் பட்டி காவல்துறையினர் விசாரித்தனர்.
காவல் நீட்டிப்பு
திருவில்லிபுத்தூர், மே 30- விருதுநகர் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜீனத் அஹமது மாடசாமி உட்பட நான்கு பேர் திங்களன்று திருவில்லிபுத்தூர் வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் காவல் நீட்டிப்புக்காக ஆஜர்படுத்தப்பட்ட னர் அவர்களது காவலை ஜூன் 9-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கோபிநாத் உத்தரவிட்டார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்கம்
திருவில்லிபுத்தூர், மே 30- திருவில்லிபுத்தூர் மக்கள் சேவைமையம் சார்பில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-4-க்கான பயிற்சி வகுப்பு திருவில்லிபுத்தூர் பென்னிங்டன் நூலகத்தில் ஞாயிறன்று தொடங்கியது. தொடக்க விழா விற்கு மக்கள் சேவை மைய தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இராஜபாளையம் ராஜூ கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கலாவதி சேகர், பென்னிங்டன் கமிட்டி நிர்வாகிகள் சந்தனமகாலிங்கம் ஜெயக்குமார் மக்கள் சேவை மைய இணைச்செயலாளர் திருப்பதி பயிற்சியாளர் சசிரேகா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தனர். மக்கள் சேவை மைய செயலாளர் ரவிந்திரநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார். பயிற்சி ஜூலை கடைசி வாரம் வரை ஒவ்வொரு ஞாயிறுதோறும் நடைபெறுகிறது.
பட்டமளிப்பு விழா
திருவில்லிபுத்தூர், மே 30- திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கலசலிங்கம் பல்க லைக் கழகத்தில் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா கலசலிங்கம் பல்கலைக் கழகத் துணைத்தலைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது. ஐ.டி.ஐ. முதல்வர் தங்கவேல் வரவேற்றார். கோயம்புத்தூர் 5-கே நெட்ஒர்க் நிறுவன நிர்வாக இயக்குநர் கார்த்திக்குமார், கலசலிங்கம் பல்கலை. திட்ட மேலாளர் பிரதீப்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி பி.ஜி. குருசாமிபாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விருதுநகர் மாவட்ட தொழில் மைய மேலாளா் டி.கண் ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஐ.டி.ஐ. முடித்த 120 மாணவர்களுக்கு என்.சி.வி.டி. பட்டம் வழங்கிப் பேசினார்.
மதுரையில் கொலை
மதுரை, மே 30- மதுரை காமராஜர்புரம் திரு.வி.க. தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (40). ஞாயிறன்று நள்ளிரவு இவர் தனது வீட்டு வாசல் முன்பாக நின்றிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் ராஜேஷ்குமாரை வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்குமாரை அப்பகுதியினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிரச்சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்ட அவர் திங்களன்று உயிரிழந்தார். கீரைத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சதுரகிரி கோவிலில் வைகாசி மாத விழா
திருவில்லிபுத்தூர், மே 30- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பிரதோஷத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வெள்ளிக்கிழமை முதல் 5 நாள்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையொட்டி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை கோயில் அறங்காவ லர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.
மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
மதுரை, மே 30- மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருக்குச் சொந்தமான வீட்டின் ஒரு பகுதியை அழகு ராஜா என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்த நிலை யில் அழகுராஜாவின் நடவடிக்கையில் இவருக்கு சந்தே கம் ஏற்பட்ட காரணத்தால் காலி செய்யுமாறு பல முறை கூறியுள்ளார். ஆனால் அழகுராஜா வீட்டை காலி செய்ய முடியாது என்று மறுத்து விட்டாராம். இதனால் மனம் உடைந்த சுப்பையா தனது மனைவியுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்களன்று வந்தார். அங்கு தம்பதிகள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் சுப்பையாவை தடுத்து நிறுத்தி மீட்டனர்.
‘சின்னாளபட்டி பேரூராட்சியில் என்ன நடக்கிறது?’
சின்னாளபட்டி, மே 30- சின்னாளபட்டி பேரூராட்சிக் கூட்டம் தலைவர் பிரதீபா தலைமையில் நடை பெற்றது. துணைத் தலைவர் ஆனந்தி, முன்னிலை வகித்தார். செயல் அலு வலர் நந்தகுமார் வரவேற்றார். எழுத்தர் சசிக்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக் கும் டெண்டர் வழங்கக்கூடாது. ஜி.எஸ்.டி. வருமான வரி செலுத்தி யவர்களுக்கு மட்டுமே டெண்டர் வழங்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஏழாவது வார்டு திமுக உறுப்பினர் ஹேமா பேசுகையில், பேரூராட்சி அதி காரத்தில் யார் தலையிட வேண்டும் என் பதை செயல் அலுவலர் தெரிவிக்க வேண்டும். எனது வார்டில் முக்கியப் பொறுப்பில் உள்ளவரின் கணவர் அதி காரம் செய்கிறார். திமுக வார்டு உறுப்பினர்கள் ஹேமா, தாமரைச்செல்வி, சாந்தி, செல் வக்குமாரி, ராஜாத்தி, ராசு, செல்வி, ஆகி யோர் பேசுகையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த அப்பாவும், மகன் இருவரும் டெண்டர் கொடுத்துள்ளனர். ஒரே குடும் பத்தைச் சேர்ந்தவர்களுக்கு டெண்டர் வழங்கக்கூடாது. ஜி.எஸ்.டி. வருமான வரி கட்டியவர்களுக்கு மட்டும்தான் டெண்டர் வழங்கவேண்டும் என்றனர். 14-ஆவது வார்டு திமுக உறுப்பி னர் ராஜாத்தி பேசுகையில், கடந்த நான்கு மாதமாக தனது வார்டில் சிறு பாலம் அமைக்க வேண்டி மனு கொடுத்து வருகிறேன். நிதி இல்லை எனக் கூறி பாலம் கட்டவில்லை. ஆனால் லட்சக்க ணக்கில் பொது நிதியில் வேறு பணி களை செய்யலாம் என கூறுகிறீர்கள். 10 ஆயிரம், 15 ஆயிரம் பணம் கூட பேரூ ராட்சியில் இல்லையா? எனக் கேள்வி யெழுப்பினார்.
சிபிஎம் கிளை அமைப்பு
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 222 பேரின் கணக்குகள் முடக்கம்திருவில்லிபுத்தூர், மே 30- திருவில்லிபுத்தூர் ஒன்றியம் ஹவுசிங் போர்டு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை அமைக்கப் பட்டுள்ளது. கிளைச் செயலாளராக மனோஜ்குமார் தேர்வு செய்யப்பட்டார். அமைப்புக் கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் எம். திருமலை, ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.சசிக்குமார் கலந்து கொண்டனர்.
மதுக்கடையில் கொள்ளை
வெம்பக்கோட்டை, மே 30- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ளது செல்லையாபுரம். இங்கு அரசு மதுபானக் கடை உள்ளது. இதில், திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்த பாபு விற்ப னையாளராகவும், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த சேகர் மேற்பார்வையாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். ஞாயிறன்று இரவு, கடையைப் பூட்டிவிட்டு விற்பனை யாளர் சென்றுள்ளார். திங்களன்று காலை வழக்கம் போல் கடையைத் திறக்க வந்த பாபு, கடையின் பூட்டு உடைக்கப் பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு, வெம்பக்கோட்டை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். காவல்துறை நடத்திய விசாரணையில், ரூ.18 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மற்றும் மேஜையில் இருந்த ரூ.2,500 ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரிய வந்துள்ளது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 222 பேரின் கணக்குகள் முடக்கம்
விருதுநகர்/தேனி, மே 30- விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகர் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 76 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் என 119 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன” எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. தேனி கஞ்சா குற்ற வழக்குகளில் ஈடுபடும் வியாபாரிகள், கடத்தல்காரர்கள் அவர்களின் உறவினர்கள் என 146 பேர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக குற்றவாளிகள், அவர்களது உறவினர்களின் வங்கிக் கணக்குகள் முடக் கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் இது தொடர்பாக பதிவான வழக்குகளில் 110 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு 81 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 92 குற்ற வாளிகளின் 99 வங்கிக் கணக்குகளும், அவர்களுக்கு உதவியாக இருந்து பணப்பரிவர்த்தனை செய்த 47 பேரின் வங்கிக் கணக்குகளும் அவற்றில் இருந்த ரூ 5,09,931 முடக் கம் செய்யப்பட்டுள்ளது.
வாங்காத பணத்திற்கு வட்டி கேட்ட கூட்டுறவு சங்கம் சிபிஎம் முயற்சியால் நகையை திருப்பி தர உறுதி
தேனி, மே 30- சின்னமனூர் அருகே உள்ள கன்னி சேர்வைபட்டி தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில் புத்தம்பட்டியைச் சேர்ந்த சம்பத்குமார் என்பவர் மூன்று பவுன், ஜோதி என்பவர் ஐந்து பவுன், சுப்பிரமணி என்பவர் ஐந்து பவுன் என மொத்தம் 13 பவுன் நகையை கடந்த ஜனவரி 2021-ஆம் ஆண்டு அடமானம் வைத்தனர். அடமானம் வைத்த நகைக்கு உடனடி யாக பணம் வழங்காமல் பாஸ் புத்தகத்தில் மட்டும் ரூ 2,85, 000 வரவு வைத்துவிட்டு பத்து நாட்கள் கழித்து வந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என சொல்லி அனுப்பியுள்ளனர். நீண்ட நாட்கள் ஆகி யும் பணம் எடுக்க முடியவில்லை. தொட ர்ந்து அவர்களை அலைக்கழிப்பு செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 20022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டசொல்லி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தலைவர்களிடம் பாதிக்கப் பட்டோர் முறையிட்டனர். அதைத் தொட ர்ந்து மாவட்ட ஆட்சியர், கூட்டுறவு இணைப்பதிவாளர் உள்ளிட்ட அதிகாரி களுக்கு புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்ட அறிவிப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் நகையைத் திருப்பித் தரக்கோரி திங்களன்று கன்னிசேர்வைபட்டி கூட்டுறவு சங்கம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் விவசாயிகள் காத்தி ருக்கும் போராட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டது. இதையறிந்து சின்னமனூர் காவல் ஆய்வாளர் சேகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் கே.எஸ் .ஆறுமுகம், நகர் பொறுப்பாளர் மணிகண்டன், கூட்டுறவு சங்கத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கூட்டுறவு அதி காரிகள் கலந்து கொண்டனர் . அப்போது நகையைத் திருப்பி தர வேண்டும்.தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப் பட்டது. இதையடுத்து ஜூன் 10-ஆம் தேதி நிபந்தனை இன்றி விவசாயிகளின் 13 பவுன் நகையை திருப்பி கொடுப்பதாக ஒப்புக் கொண்டனர். இதையடுத்து காத்திருக்கும் போராட் டம் ஒத்திவைக்கப்பட்டது.