districts

img

மதுரை மாநகரில் தீவிர தூய்மைப்பணி இயக்கம்

மதுரை, ஜூலை 23- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 வார்டு எண்.30 ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிகளில் “ நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்  கம் “தீவிர தூய்மைப்பணி களை மேயர் வ.இந்திராணி சனிக்கிழமையன்று கொடிய சைத்து துவக்கி வைத்தார்.  சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு பெரு மளவிலான மக்கள் பங்கேற்பு டன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும்  விழிப்புணர்வு முகாம்கள் “ நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” மதுரை  மாநகராட்சி சார்பில் மேற்  கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆழ்வார்  புரம் வைகை வடகரை, மதிச்சி யம் பகுதிகள், குருவிக்காரன் சாலை பாலம் அதனை சுற்றி யுள்ள பகுதிகள், ஓபுளா படித்  துறை பகுதிகள், ஆர்.ஆர். மண்டபம் உள்ளிட்ட பகுதி களில் தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த  தூய்மைப்பணி துவக்கத்தில் தூய்மை குறித்த உறுதிமொழி யினை மேயர் தலைமையில் அனைத்துப் பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்த தூய்மைப்பணியில் சுமார் 200 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து மாட்டுத்தாவணி நெல் மற்றும் மலர் வணிக வளாக அலுவல கத்தில் ஆதரவற்ற பெண் களுக்கான பயிற்சி பட்டறை யினை மேயர் வ.இந்திராணி துவக்கி வைத்து உரையாற்றி னார். இந்நிகழ்வில் துணை மேயர் தி.நாகராஜன், மண்ட லத் தலைவர்கள் முகேஷ் சர்மா, சரவணபுவனேஸ்வரி. சுவிதா. துணை ஆணையாளர் முஜிபூர்ரகுமான் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், உத விப் பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.