districts

img

கூடலூர் அருகே கரடி தாக்கியதில் விவசாயி படுகாயம்

தேனி, ஜன.27- கூடலூர்  மலையடி வாரப் பகுதியில் விவ சாய பணிக்கு சென்ற  கூடலூரைச் சேர்ந்த விவசாயி கோபால், கரடி தாக்கியதில் படு காயம் அடைந்தார். அவ ருடன் சென்ற நண்பர் ஓடி தப்பித்தார். படு காயமடைந்த கோபால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூடலூர் வனப் பகுதியை ஒட்டிய மலை  அடிவாரப் பகுதிகளில் தனியார் பட்டா  நிலங்கள்  உள்ளன. இந்தப் பகுதியில் மா,  இலவம், கொட்டை முந்திரி, மொச்சை, அவரை உள்ளிட்ட மானாவாரி விவசாயம் செய்யப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர், மேக மலை புலிகள் காப்பகம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக உள்ள மேற்கு மலைத்  தொடர்ச்சி பகுதியில் உள்ள மலையடி வாரப் பகுதிகளில் உள்ள இந்த விவசாய  நிலங்களில் அடிக்கடி யானை, காட்டெ ருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களை சேதப் படுத்துவதும், விவசாய நிலங்களில் பணி செய்பவர்களை தாக்குவதும் நடந்து வரு கிறது. கூடலூர் கண்ணகி நகரைச் சேர்ந்த விவசாயி கோபால் (60) என்பவருக்கு கூட லூரை ஒட்டிய மலை அடிவாரப் பகுதி யில் உள்ள பெருமாள் கோயில் அருகே குத்தகைக்கு வாங்கிய இலவமரம் விவ சாய பட்டா காடு உள்ளது. வழக்கம்போல் திங்கட்கிழமை காலை தனது நண்பர் ராமர்  என்பவருடன் தனது இருசக்கர வாக னத்தில் இலவந்தோப்புக்கு சென்று, அங்கு  ஒற்றையடி பாதையில் நண்பருடன் நடந்து  சென்ற போது அவர்களுக்கு எதிரே திடீ ரென இரண்டு கரடிகள் வந்துள்ளன. கரடிகளை கண்டதும் சுதாரித்துக் கொண்ட நண்பர்கள் இருவரும் தப்பி ஓட  முயன்ற போது ஒரு கரடி மட்டும் விவசாயி  கோபால் மீது பாய்ந்து தாக்கியது. இதைக்  கண்ட ராமர் அங்கிருந்து தப்பி ஓடி அக்கம்  பக்கத்து தோட்டக்காரர்களை அழைத்துள்  ளார். ராமரும் பக்கத்து தோட்டக்கா ரர்களும் வருவதற்குள் கரடி கோபாலை தாக்கியதில் பலத்த காயமடைந்தார். ஆட்கள் வந்ததும் சத்தத்தை கண்ட கரடி அங்கிருந்து ஓடிவிட்டது.  படுகாயமடைந்து கிடந்த கோபாலை மீட்டு அங்கிருந்து கம்பம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த னர். கரடி தாக்கியதில் பலத்த காயம் அடைந்திருந்ததால் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு கல்லூரி மருத்துவமனைக்கும் பின்பு அங்கிருந்து மதுரை ராஜாஜி அரசு  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டு கோபாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்  கப்பட்டு வருகிறது. சிபிஎம் கூடலூர் இடைக்கமிட்டி  உறுப்பினர் படுகாயமடைந்த கோபால் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் கூடலூர் இடைக் கமிட்டி உறுப்பினராக செயல்பட்டு வரு கிறார். வன நிலங்களை ஒட்டியுள்ள பகுதி களில் வன விலங்குகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்.  படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் கோபாலுக்கு உயர் சிகிச்சை அளிக்க மாநில  அரசு முன்வர வேண்டும். காயமுற்ற கோபால் குடும்பத்திற்கு தேவையான நிதி  உதவி வழங்க வேண்டும் என கட்சியின் கூட லூர் ஏரியா செயலாளர் பி.ஜெயராஜ் கேட்  டுக்கொண்டுள்ளார்.