districts

img

சிறப்பு காவல்படை வீரர்கள் மூலம் தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

தூத்துக்குடி, பிப்.18- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந் தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சி கள் மற்றும் 17 டவுன் பஞ்சாயத்துக்களில் சனிக் கிழமையன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.  தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகள் குறித்து வெள்ளியன்று (18.02.2022) மாவட்ட காவல் மைதானத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் அறிவுரைகள் வழங்கினார். இக்கூட்டத்தில் சைபர் குற்ற பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோ வன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, ஆயுதப்படை காவல் ஆய்வா ளர் சுடலைமுத்து, தென்பாகம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் ரேனியல் ஜேசுபாதம், மாவட்ட கட்டுப்பாட்டு அறை காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர். தேர்தல் அமைதியான முறையில் பொது மக்கள் அச்சமின்றி ஜனநாயக முறைப்படி வாக்களிக்க ஏதுவாக 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், 13 காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 2,500 காவல்துறையி னர் மற்றும் 120 தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அதிரடிப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.