மதுரை, ஜூன் 18- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தின் மதுரைக் கோட்டம் உழைக்கும் மகளிர் துணைக்குழு சார்பில் 36 ஆவது மகளிர் மாநாடு ஜூன் 18 சனிக் கிழமையன்று கே.கே.நகர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஹாலில் நடைபெற் றது. மாநாட்டிற்கு அமைப்பாளர் த.சித்ரா தலைமை வகித்தார். இணை அமைப்பாளர் எஸ்.மஞ்சுளா வர வேற்று பேசினார், பெண் ஊழியர் உபகுழு மாநில ஒருங்கிணைப்பாளர் (இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்) எஸ்.பிரேமலதா சிறப்புரையாற்றினார். தென்மண்டல இணை அமைப்பாளர் ஜெ.விஜயா, சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு ஜே. லூர்து ரூபி ஆகியோர் வாழ்த்திப்பேசி னர். காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்டச் பொதுச் செயலாளர் என்.பி. ரமேஷ் கண்ணன் வேலை அறிக்கை - வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தார்.
வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு பாராட்டு
பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற இறகுப்பந்து வீராங்கனை ஜெர்லின் அனிகாவிற்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. உழைக்கும் மகளிர் துணைக் குழு இணை அமைப்பாளர் த.வனிதா நன்றி கூறினார். மெனோபாஸ் பிரச்சனைகளுக்கு மகளிருக்கு சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும். குழந்தைப் பராமரிப்பு விடுப்பு வழங்க வேண்டும். பணி யிடங்களில் குழந்தைக் காப்பகங்கள் அமைத்திட வேண்டும், நாடு முழு வதும் பெண்கள் மற்றும் பெண் குழந் தைகள் மீது அதிகரித்து வரும் வன் முறைகளைத் தடுத்திட கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண் டும், மத்திய - மாநில அரசுகள் குடும்ப வன்முறை தடுப்புச் சட் டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். பெண்கள் சமத்துவத்தை உறுதிப்படுத்திட நீண்ட கால கோரிக்கையான நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33 சத இடஒதுக் கீட்டு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். பணிநிய மனங்கள் மற்றும் பதவி உயர்வில் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தொட ரும் பாலியல் பாரபட்சப் போக்கினை கண்டித்தும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.