மதுரை, ஜூலை 3- காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கத்தின் (ஏஐஐஇஏ) மதுரை கோட்ட 66 ஆவது மாநாடு திருநகரில் கோட்டச் சங்க தலை வர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஜூலை 2 சனிக்கிழமையன்று துவங்கி யது. துணை மேயர் டி நாகராஜன் வர வேற்புரை ஆற்றினார். பேரணியை 96 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் என். விஜயா துவக்கி வைத்தார்.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் கே. வேணுகோபால், தென் மண்டல கூட்டமைப்பின் துணைத் தலை வர் கே.சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். சகோதர சங்கத் தலை வர்கள் சி. முத்துக்குமாரசாமி, சி.சந்திர சேகரன், எம்.நிர்மலா, ஜோசப் சுரேஷ், ராஜ்குமார், டி பாண்டியராஜன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட் டில் எல்.ஐ.சி ஊழியர்களின் குழந்தை களுக்கு சிறந்த மாணவர்களுக்கான பரிசு வழங்கப்பட்டது என்.பி.ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார். மாநாடு ஞாயி றன்றும் நடைபெறுகிறது.