districts

img

பணிநிறைவு பாராட்டு விழா

மதுரை, மே 27- காப்பீட்டுக்கழக ஊழியர்  சங்க மதுரை கோட்ட சங்க முன்னாள் பொறுப்பாளர் எம். ஜான்சன் ரூஸ்வெல்ட் அவர்களின் பணி நிறைவு பாராட்டுவிழா மே 27 சனிக்கிழமையன்று பூங்கா முருகன் கோவில் மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கோட்ட தலைவர் நா.சுரேஷ் குமார்  தலைமை வகித்தார். துணைத் தலைவர் பி.மகா லிங்கம் வரவேற்றார். எல்ஐசி  பென்சனர் சங்க அகில இந்  திய துணைத் தலைவர் சி. சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச்  செயலாளர் மா. கணேசன்,  துணை மேயர் டி. நாகராஜன், மாமன்ற உறுப்பினர் டி. குமர வேல், காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்க தென்மண்டல முன் னாள் பொதுச் செயலாளர் க. சுவாமிநாதன் மற்றும் தென் மண்டல நிர்வாகிகள் சிவசுப்பிரமணியன், ஜானகி ராமன் நெல்லை கோட்ட தலைவர் சி. முத்து குமார சுவாமி, மதுரை கோட்ட முன்னாள் தலைவர் ஜி. மீனாட்சி சுந்தரம், ஒன்றுபட்ட மதுரை -நெல்லை கோட்ட பொதுச் செயலாளர் தேவ பிரகாஷ், மதுரை கோட்ட பொதுச் செயலாளர் என்.பி.ரமேஷ் கண்ணன், தமிழ்  நாடு சிறுபான்மை மக்கள்  நலக்குழு மாவட்டத் தலை வர் கே.அலாவுதீன் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர். எம். ஜான்சன் ரூஸ்வெல்ட் ஏற்புரையாற்றினார். மதுரை கோட்ட நிர்வாகி ஆர். ரமேஷ் பாண்டியன் நன்றி கூறி னார். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஜான்  சன் ரூஸ்வெல்ட் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிறு பான்மை மக்கள் நலக்குழு  உள்ளிட்ட பல்வேறு வெகு ஜன அமைப்புகளுக்கு நிதி வழங்கினார்.