திருவில்லிபுத்தூர், மார்ச்.11- திருவில்லிபுத்தூர் நகர் மன்ற தலைவர் ரவி கண்ணன் வெள்ளியன்று 15, 16, 17 வார்டுகளில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சுகாதாரப் பணி, குடிநீர் விநியோகம், வாறுகால் வசதி, இதர வசதிகள் பற்றி பொதுமக்களிடம் கேட்ட றிந்தார். நகரமன்றத் துணைத்தலைவர் செல்வ மணி, நகராட்சி ஆணையாளர் மல்லிகா, நகர்நல அலுவலர் கவிப்பிரியா, நகர்மன்ற உறுப்பினர்கள் சுந்தரி, பெ.மோகன்ராஜ் மற்றும் ஊர் தலைவர்கள் உடனிருந்தனர். அப்போது நகர்மன்றத் தலைவர் கூறுகையில், அனைத்து அடிப்படை பணி களும் பொதுமக்களுக்கு விரைந்து செய்து தரப்படும். திருவில்லிபுத்தூர் நகராட்சி சிறந்த நகராட்சியாக மாற்றுவதே எனது நோக்கம் என்று தெரிவித்தார்.