districts

img

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி, மார்ச் 21- பெரியகுளம் அருகே ஜெயமங்க லத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா நேரில் ஆய்வு செய்தார்.  ஆய்வின் போது, நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகளின் எண்  ணிக்கை, இருப்பு அதற்கான பதிவேடுகள், அச்சமயத்தில் விவசாயிகளால் கொண்டு வரப்பட்ட நெல்லின் ஈரப்பதம், விவசாயி களிடம் கொள்முதல் நிலையத்தில் கொள்  முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சம் பந்தமாக ஏதும் குறைபாடுகள் உள்ளதா  என்பது குறித்தும். நெல் கொள்முதல் நிலை யத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் ஆட்சியர் கூறுகையில், தேனி  மாவட்டத்தில் 14 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நடப்பு காரீப் மார்க்கெட்டிங் பரு வம் 2022-2023-ஆம் நெல் கொள்முதல் பரு வத்திற்கு அரசு நிர்ணயித்த ஆதார மற்றும்  மானிய விலையான சன்னரகம் நெல்லுக்கு  குவிண்டால் 1- க்கு ரூ.2160- வீதம் பொது ரக  நெல்லுக்கு குவிண்டால் 1-க்கு ரூ.2115- வீதம் இதுவரை 14 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் மூலம் 3433 மெ.டன் சன்னரக நெல்லும், 214 மெ.டன் பொது ரக  நெல்லும் விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்குண்டான தொகை யினை உடனுக்குடன் விவசாயிகள் வங்கி  கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது என்  றார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை  மண்டல மேலாளர் வீ.செந்தில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பொ.தனலட்சுமி உட்பட சம்  பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.