சிவகங்கை, ஜூலை 19- சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 829 நியாயவிலைக் கடை களில் மொத்தம் 4,20,249 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். குடும்ப அட்டைகள் கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்பட்டு 829 முகாம்களில் விண்ணப்பங் கள் பதிவு செய்யும் பணி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மூல மும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமும் மேற்கொள்ளப்படவுள் ளது. இதில், முதற்கட்ட முகாம்கள் 24.7.2023 முதல் 4.8.2023 வரை 12 நாட்களும், இரண்டாம் கட்ட முகாம்கள் 5.8.2023 முதல் 16.8. 2023 வரை 12 நாட்களும் நடத் தப்படவுள்ளது. இம்முகாம்களில் பயோமெட்ரிக் முறையில் விண் ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் விரல்ரேகை பதிவு செய்யப்படும். சிவகங்கை மாவட்டத்தில் முதற் கட்டமாக அனைத்து வட்டங்களி லும் உள்ள 689 முகாம்களில் ஊர கப் பகுதிகளில் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற வுள்ளது. இரண்டாம் கட்டமாக நகர்ப்புறப் பகுதிகளான நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள 140 முகாம்களில் விண் ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெறவுள்ளது. அவ்வாறு மேற் கண்ட முகாம்களில் எதிர்பாராத வித மாக கலந்து கொள்ள இயல வில்லையெனில் அவர்களுக்கு தனியாக வேறொரு நாட்களில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கள் வழங்கப்படும்.
மேற்கண்ட இரண்டு கட்ட முகாம்களிலும் 829 முகாம் பொறுப்பு அலுவலர்களும், அனைத்துப் பணிகளையும் கண்காணிக்க 64 மண்டல அலு வலர்களும், 39 மேற்பார்வை அலு வலர்களும், 9 மாவட்ட அளவிலான மேற்பார்வை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், விண்ணப்பதாரர் விண்ணப்பத்துடன் முகாமிற்கு வரும்பொழுது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் இணைப்பு எண், வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் வர வேண்டும். பொதுமக்கள் கலைஞர் மக ளிர் உரிமைத் திட்ட முகாம்கள் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும், தங்களது சந்தே கங்களை நிவர்த்தி செய்து கொள்வ தற்கும் ஏதுவாக மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை ஒன்று இயங்கி வருகிறது. அக்கட்டுப்பாட்டு அறை யில் இலவச தொலைபேசி எண்: 1077 மற்றும் 04575 – 246233 ஆகிய எண்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. மேலும் சிவகங்கை மாவட்டத் தில் உள்ள 9 வட்டங்களிலும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இத்திட்டத்திற்கென கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் 04575–240232, மானாமதுரை வட்டாட்சியர் அலு வலகத்தில் 04574–258017, இளை யான்குடி வட்டாட்சியர் அலுவல கத்தில் 04564–265232, திருப்பு வனம் வட்டாட்சியர் அலுவல கத்தில் 04574-265094, காளை யார்கோவில் வட்டாட்சியர் அலுவல கத்தில் 04575–232129, தேவ கோட்டை வட்டாட்சியர் அலுவல கத்தில் 04561–272254, காரைக் குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 04565–238307, திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 04577–266126, சிங்கம்புணரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 04577-242155 ஆகிய எண்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனை பொது மக்கள் பயன்படுத்திக் கொண்டு விபரங்கள் பெறலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு முகாமில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு வசதி களும் செய்யப்பட்டுள்ளன. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள ஆவ ணங்களுடன் தங்களது விண்ணப் பங்களை பதிவு செய்து பயன் பெறும் வகையில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒருங்கினைந்து சிறப்பான பணி களை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலு வலர் மற்றும் உணவு பாது காப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா தெரிவித்தார்.