மதுரை, ஜூன் 6- தமிழ்நாடு விவசாயி கள் சங்க அலங்காநல்லூர் ஒன்றிய மாநாடு பாறை பட்டியில் ஒன்றியத் தலைவர் சேதுராஜன் தலைமையில் நடைபெற்றது. தங்கம் வரவேற்றார். விவ சாய தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் வி.உமா மகேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆண்டிச்சாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் அடக்கிவீரணன் நிறைவுரை யாற்றினார். தலைவராக சி.தங்கம், செயலாளராக எம்.சேது ராஜன், பொருளாளராக என். ஸ்டாலின் குமார், துணை தலைவராக பழனிச்சாமி, துணைச் செயலாளர் கோவிந்த ராஜ் உட்பட ஒன்பது பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யபட்டது. சாத்தையாறு அணை யை தூர்வாரி வைகை அணை நீர் மூலம் தண்ணீர் நிரப்ப வேண்டும். மாம்பழம், கொய்யா அதிகம் விளை யக்கூடிய அலங்காநல்லூர்- பாலமேடு பகுதியை மையப்படுத்தி பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க வேண் டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிழக்கு தாலுகா கிழக்கு தாலுகா மாநாடு யா.நரசிங்கத்தில் தாலுகா தலைவர் பி.தனசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஏ. விஜயமுருகன், மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோ வன் ஆகியோர் பேசினர். முன் னதாக வேலை அறிக்கை யை தாலுகா செயலாளர் கே. சேகர் சமர்ப்பித்தார். நிர்வாகிகள் தேர்வு: தாலுகா தலைவராக கே. சேகர், தாலுகாச் செயலாள ராக பி.தனசேகரன், பொரு ளாளராக பெருமாள், துணைத் தலைவராக சின்னழகன், துணைச் செயலாளராக மலர், பொன்னையா உட்பட 12 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட் டத்தை 200 நாட்களாக அதி கரித்து கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும். வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.