districts

img

பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திடுக

நாமக்கல், ஜன.6- பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என  தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தி னர் கோரிக்கை விடுத்துள்ளனர். பணி நீக்க காலத்திலும், பணிக்காலத்திலும் உயிரிழந்த சாலை பணியாளர்களின் வாரிசுக ளுக்கு உடனடியாக பணி வழங்க  வேண்டும். பணி நீக்க காலத்தை  பணிக்காலமாக அறிவித்து பணப் பலன்கள் வழங்க வேண்டும். தொழில்நுட்ப ஊழியருக்கான ஊதியம் வழங்க வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு  நெடுஞ்சாலைத்துறை சாலை பணி யாளர்கள் சங்கம் சார்பில் மெழுகு வர்த்தி ஏந்தி வாயிற்கூட்டம் நடை பெற்றது. நாமக்கல் சாலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற வாயிற்கூட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட தலை வர் வேலு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட இணை செயலா ளர் ரவிக்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் கதிர்வேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். இதில், சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.தன சேகரன், மாவட்ட பொருளாளர் என்.மயில்சாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன், வட்ட செயலாளர் விவேகானந்தன், பொது சுகாதா ரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ஈழவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு கோபி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவல கம் முன்பு நடைபெற்ற கூட்டத் திற்கு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க கோட் டத் தலைவர் நா.முருகவேல் தலைமை வகித்தார். இதில், மாநி லச் செயலாளர் சு.செந்தில்நாதன், கோட்ட துணைத் தலைவர் ஆர்.முருகன், செயலாளர் ஆர்.கருப் புச்சாமி, பொருளாளர் எஸ்.ஜெப மலைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து  கொண்டனர். திருப்பூர் திருப்பூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற வாயிற்கூட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்  பணியாளர்கள் சங்க கோட்ட இணைச் செயலாளர் பி.விசுவநா தன் தலைமை வகித்தார். இதில்,  மாநில செயற்குழு உறுப்பினர் எம். மணிவேல், கோட்ட செயலாளர் ஆர்.ராமன், பொருளாளர் கருப் பன், கோட்ட துணை தலைவர் பி அம்மாசை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.