மதுரை, டிச.28- மின் வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மின்வாரிய பணி யாளர்களுக்கு 01.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை உடனடி யாக வழங்க வேண்டும். அர சாணை 100 இன் படி மின் வாரிய பணியாளர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோர் களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஏற்றுக் கொள் ளக்கூடிய முத்தரப்பு ஒப் பந்தத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 10 அன்று மின்ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடு படுகின்றனர். இதனை விளக்கி மதுரை புதூரில் தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு (சிஐ டியு) மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் இராமநாதபுரம் மின் வாரிய அனைத்து தொழிற் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பாக ராமநாதபுரம் மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பாக சாமி அய்யா தலை மையில் பிரச்சாரம் நடை பெற்றது. மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஆர் குரு வேல், மாவட்ட தலைவர் முரு கன், எம்ப்ளாயிஸ் பெடரே ஷன் மாவட்டச் செயலாளர் வீரசேகர் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் பேசினர்.