districts

img

மோடி அரசைக் கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்

திண்டுக்கல், செப்.1- ஒன்றிய மோடி அரசின் விலை உயர்வு, வேலையில்லாத திண்டாட்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் செப்டம்பர் 7 அன்று நாடு தழுவிய மறியல் போராட்டம் நடை பெறவுள்ளது. இதையொட்டி தென் மாவட்டங்களில் செப்டம்பர் 1 அன்று மறியல் போராட்டத்தை விளக்கி பிரச்சார இயக்கம் துவங்கியது.  இதனொரு பகுதியாக திண்டுக் கல் மாவட்டம் பெரியகோட்டை, ம.மு.கோவிலூர், சீலப்பாடி புறவழிச்சாலை, உழவர் சந்தை, ராஜக்காபட்டி பிரிவு, காந்தி நகர் காலனி, ஆட்சியர் அலுவலகம், தாடிக்கொம்பு பேருந்து நிறுத்தம்,  ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் வ.கல்யாணசுந்தரம், அஜாய், ஒன்றியச் செயலாளர் சரத்குமார், நகரச் செயலாளர் அரபுமுகமது உட்பட பலர் பங்கேற்றனர்.  

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் முழுவ தும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சார இயக்கங்கள் நடை பெற்றன.  சிவகாசி மாநகராட்சி பகுதி  முழுவதும் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். விருதுநகர் தெற்கு ஒன்றியம் பொம்மையாபுரம் முதல் செல் லையநாயக்கன்பட்டி வரை  நடைபெற்ற பிரச்சார இயக்கத்தி ற்கு ஒன்றிய செயலாளர் பி.நேரு தலைமையேற்றார். 

சாத்தூர் நகர் முழுவதும் நடை பெற்ற பிரச்சார இயக்கத்திற்கு நகர் செயலாளர் பி.பெத்தராஜ் தலை மையேற்றார். மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.விஜயமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். சாத்தூர் ஒன்றியம் மேட்டமலை முதல் வெள்ளையாபுரம் வரை நடைபெற்ற பிரச்சாரத்திற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சரோஜா தலைமையேற்றார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்பாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வெம்பக்கோட்டை வட்டம் சுண்டங்குளம் முதல் அம்மையார் பட்டி வரை நடைபெற்ற பிரச்சாரத்தி ற்கு ஒன்றியச் செயலாளர் எம்.முனியசாமி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி துவக்கி வைத்தார்.  நரிக்குடி முதல் பூலாங்கல் வரை நடைபெற்ற பிரச்சாரத்திற்கு திருச்சுழி ஒன்றியச் செயலாளர் மார்கண்டன் தலைமையேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.அன்புச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இராஜபாளையம் நகரில் நடைபெற்ற இயக்கத்திற்கு நகரச் செயலாளர் மாரியப்பன் தலைமை  வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் துவக்கி வைத்தார். தெற்கு மலையடிப்பட்டி, வடக்கு அழகை நகர், பி எஸ் கே  நகர், பொன்னகரம் ஆகிய பகுதிக ளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் கட்சியின் மூத்த தலைவர் கணே சன் மற்றும் நகர்க்குழு உறுப்பி னர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். தேனி சின்னமனூரில் நடைபெற்ற இயக்கத்தில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினர்  என்.அம்சமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இராமநாதபுரம்

தேவிபட்டினத்தில் நடைபெற்ற இயக்கத்திற்கு கிளை செயலாளர் எம்.பி.இளங்கோவன் தலைமை வகித்தார். விதொச தாலுகா செய லாளர் ஆர்.அழகேந்திரன், சிபிஎம் தாலூகா செயலாளர் பி.செல்வ ராஜ், மாவட்டச் செயற்குழு நா.கலையரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.