புகாரெஸ்ட், பிப்.26- ரஷ்யா-உக்ரைன் பிரச்சனை காரணமாக உக்ரைனில் சிக்கி யுள்ள இந்தியர்களை மீட்கும் பணி யில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள் ளது. உக்ரைன் தனது வான் எல்லைகளை மூடியதால், அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர் களை மீட்க அதிகாரிகள் நட வடிக்கை எடுத்து வருகின்றனர். அதனொருபகுதியாக, சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லையை வந்த டைந்த இந்தியர்கள், அதிகாரி கள் மூலம் ருமேனிய தலைநகர் புகாரெஸ்ட் நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் இருந்து வந்த இந்தியர்களை அழைத்து வரு வதற்காக ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்குகிறது. அந்த வகையில், இந்தியாவிற்கு சனிக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் காலை பத்து மணியளவில் புகாரெஸ்ட் நக ரத்தில் தரையிறங்கியது.
அங்கிருந்து 219 இந்தியர்களு டன் ஏர் இந்தியா விமானம் மும்பை புறப்பட்டது. விமானம் சனிக் கிழமை இரவு ஒன்பது மணியள வில் ஏர் இந்தியா விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை வந்தடையும். நாடு திரும்பியவர்களை ஒன்றிய அமைச்சர் பியூஷ்கோயல் வர வேற்பார் என தெரிவிக்கப்பட்டுள் ளது. இந்தியர்களை உக்ரைனிலி ருந்து அழைத்துவருவதில் நல்ல முன்னேற்றம் உள்ளது. வெளி யுறவுத்துறை 24 மணி நேரமும் களத்தில் பணியாற்றி வருகின்ற னர். நானும் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறேன். 219 இந்தியர்களுடன் மும்பைக்கு முதல் விமானம் ருமேனியாவில் இருந்து புறப்பட்டது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார். இரண்டாவது விமானம் மேலும் 250 இந்தியர்களுடன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தில்லி வரும் என்று எதிர்பார்ப்ப தாக அதிகாரிகள் தெரிவித்துள்ள னர். உக்ரேனிய வான்வெளியை மூடுவதற்கு முன்பு, ஏர் இந்தியா பிப்ரவரி 22-ஆம் தேதி உக்ரை னின் தலைநகர் கீவுக்கு ஒரு விமா னத்தை இயக்கியது, அதன் மூலம் 240 பேரை இந்தியா அழைத்து வரப்பட்டனர்.