districts

img

உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும்

சென்னை, பிப். 23 – உயர்கல்விக்கான (போஸ்ட் மெட்ரிக்) உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்கும் காலத்தை மேலும் ஒரு  மாதம் நீட்டிக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றிய,  மாநில அரசுகளின் நிதி பங்கீட்டுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான உதவித் தொகையை பெற ஜன.30 முதல்  பிப்.28 வரை இணையதளத்தில் பதிவு  செய்யலாம் என தமிழ்நாடு அரசு  அறிவிக்கப்பட்டிருந்தது இத்திட்டத்தின் கீழ் 10 லட்சத்திற்கும் அதிகமான மாண வர்கள் பயன்பெறுவார்கள் என அரசு  எதிர்பார்த்தது. ஆனால் மாநில முழுவதும்  68 ஆயிரத்து 413 மாணவர்கள் (15 விழுக்காடு) மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.  27 வகையான ஆவணங்களை கேட்பதால், 85 விழுக்காடு மாணவர்க ளால் விண்ணப்பிக்க முடியவில்லை. குறிப்பாக, ஆதார் அட்டையுடன் தொடர்பு எண், வங்கி கணக்கு எண்  இணைத்திருக்க வேண்டும், புதிய  சாதி சான்றிதழ் மற்றும் அதில் புகைப் படத்துடன் கூடிய எண்களும் இருக்க வேண்டும். ஏற்கனவே, படிவம்  மூலமாக பதிவு செய்த பழைய மாணவர்க ளும் இணையதளம் வாயிலாக புதுப்பித்து  பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள் ளது. இத்தகைய காரணங்களால் மாணவர்க ளால் விண்ணப்பிக்க முடியவில்லை. எனவே, மாணவர்களின் நலனை  கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு கால  அவகாசத்தை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும். இணையவழி பதிவை  அரசே செய்து கொடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம்  வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக  வியாழனன்று (பிப்.23) ஆதிதிராவிடர் நல ஆணையரகம் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநரகத்தில் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர்கள் மிருதுளா, ரா. பாரதி, மாநில குழு உறுப்பினர்கள் அருண்,  தமிழ் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.