சென்னை,டிச.3- இந்திய மாணவர் சங்கத் தின் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன், மாநிலச் செயலா ளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கொரோனா பேரிடர் கார ணமாக வேலையிழந்த பலர் தங்களின் பிள்ளைகளை கட்டணம் குறைவான தனி யார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். வேறு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் கோ ரும்போது, கட்டண பிரச் சனை உள்ளிட்ட காரணங்க ளைக் கூறி, மாற்றுச் சான்றி தழ் வழங்க மறுப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, மாற்றுச் சான்றிதழ் இல்லா மல் மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்த ரவு பிறப்பித்தது. அதுதொ டர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்க டேஷ், கட்டணம் செலுத்த இயலவில்லை, மாற்றுச் சான்றிதழ் கிடைக்கவில்லை போன்ற காரணங்களுக்காக ஒருவரின் கல்வி பாதிக்கப் படக்கூடாது என தெரிவித்து, மாற்றுச் சான்றிதழை மாண வர்களுக்கு வழங்க உத்தர விட்டார்.
இந்நிலையில் அகில இந்திய மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கங் கள் தொடர்ந்த வழக்கில், முழுமையாக கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு உரிய மாற்றுச்சான்றிதழை வழங்க வேண்டுமெனவும், கட்டணப் பாக்கி உள்ள மாணவர்களுக்கு வழங்கப் படும் சான்றுகளில் “கட்டண பாக்கி உள்ளது” என குறிப்பி டலாம் எனவும் உத்தரவிடப் பட்டுள்ளது. கல்விக் கட்ட ணம் முழுமையாக செலுத் தாத மாணவர்களின் மாற்று சான்றிதழில் ‘கட்டண பாக்கி’ என குறிப்பிடலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு அநீதியானதாகும். தற்போது சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பானது அகோர லாப பசியில் இருக்கும் தனி யார் லாபவெறிக்கு தீனி போடுவதாகவே அமையும். மாணவர்களை கட்டணத்தை செலுத்த சொல்லி கடுமை யான முறையில் மிரட்டவே இது பயன்படும்.பொதுப் பள்ளியை பாதுகாக்க,
இல வசமாக கல்வி கொடுத்திட, அரசு விதிமுறைகளை பின் பற்றாத, கட்டணக் கொள் ளையில் ஈடுபடும் கல்வி நிறு வனங்கள் மீது நடவடிக்கை யை உறுதிப்படுத்த வேண்டிய நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்களையே தண்டிப்பது நியாயம் இல்லை. பாதிப்பை ஏற் படுத்துபவர்களுக்கு நீதி மன்றம் துணை நிற்பது, நீதி மன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களை வஞ்சிப்பதற்கு ஒப்பாகும்.ஆகவே சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவேண்டும். மாண வர்கள் மீதான கரையை அரசு உடனே அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.