மதுரை, ஜூன் 5- இந்தியன் சிலம்பம் பள்ளி மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் விளையாட்டுக்கழகம் இணைந்து நடத்தும் மாபெ ரும் சிலம்பாட்ட போட்டி எல்லீஸ்நகர் செவன்த் டே மேல்நிலைப்பள்ளியில் ஞாயிறன்று நடைபெற்றது. மாமல்லன் , கலை நன்மணி இந்தியன் சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர் ஆசான் எஸ்.எம்.மணி ஆகியோர் தலைமையில் நடைபெற் றது. மதுரை மாவட்ட சிலம் பாட்ட கழக பொருளாளர் எஸ். கணேசன், வாலிபர் விளையாட்டுக்கழகத்தின் சி.பால்ச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன், வாலிபர் சங்க முன்னாள் மாநி லச் செயலாளர் எஸ். கண் ணன், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், வாலிபர் சங்க சிலம்ப பள்ளி ஆசிரியர் வடிவேலு உள் ளிட்ட பலர் கலந்துகொண்ட னர் சென்னை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.