சிவகங்கை, மார்ச் 14- போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து இநதிய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் கண்டரமாணிக்கத்தில் ஒன்றிய தலைவர்சுகுமார் தலைமையில் நடைபெற்றது .சமூக ஆர்வலர் பாரதி துவக்கி வைத்தார் .நிகழ்வில் மாவட்ட செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வத்திராயிருப்பு வத்திராயிருப்பு ஒன்றியம் மகாராஜபுரத்தில் வாலி பர் சங்கத்தின் ஒன்றிய கன்வீனர் சுந்தரலிங்கம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பாண்டியராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத், மற்றும் பலர் பங்கேற்றனர். 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கையெழுத்திட்டனர்.