districts

தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெறுக

சென்னை, ஏப். 22- தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறை வேற்றிய தொழிலாளர் விரோத சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என இந்திய வங்கி  ஊழியர் சம்மேளனம் (பெபி) வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து தலைவர் எஸ்.சுனில்குமார்,  பொதுச்செயலாளர் டி.ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம்  ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்பது உலகத் தொழிலாளி வர்க்கம் போராடிப்  பெற்ற உரிமையாகும். அந்த உரிமையை பறிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டப் பேர வையில் தொழிலாளர் விரோத மசோதாவை அரசு நிறைவேற்றியுள்ளது.  இந்த மசோதாவை தொழிலாளி வர்க்கம் ஒருபோதும் ஏற்காது. இதனை முறியடிக்கும் வரை எதிர்த்துப் போராடும் என்பது  உறுதி. 150 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமையை எந்தவித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் ஒரு திருத்தம் மூலமாக தமிழ் நாடு அரசு பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.  தொழிலாளர்களுக்கு முற்றிலும் பாதகமான இந்த சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.