விருதுநகர், ஆக.9- மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசைக் கண்டித்தும், தொடர்ந்து ஹரி யானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதலைக் கண்டித்தும் இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு ஜெ.ஜே. சீனிவாசன் தலைமை யேற்றார். துவக்கி வைத்து சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் பேசினார். திமுக சார்பில் திருப்பதி நாகராஜ், காங்கிரஸ் கட்சி யின் திவாகர், மதிமுகவின் லட்சுமணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் லிங்கசாமி, தமிழ்புலிகள் கட்சியின் விடியல் வீரப் பெருமாள் ஆகியோர் விளக்கிப் பேசினர். முடிவில் சிபிஎம் மூத்த தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமானோர் பங்கேற்ற னர்.