மதுரை, அக்.30- கேரளத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக மதுரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, ரயில்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. கேரளத்தில் உள்ள கள மச்சேரியில் சனிக்கிழமை அன்று நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிலர் உயிரிழந்ததோடு 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம டைந்தனர். இந்நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி யாக தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் காவல்துறையினர் முன் னெச்சரிக்கை பாதுகாப்பு நட வடிக்கை மேற்கொண்டுள்ள னர். இதனொரு பகுதியாக மதுரை ரயில் நிலையத்தி லும் பாதுகாப்பு அதிகரிக் கப்பட்டுள்ளது. ரயில்வே இருப்பு பாதை காவல்துறை யினர், ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து ரயில் நிலைய வளாகம், சரக்குகள் கையாளும் பகுதிகள் மற்றும் ரயில் பெட்டிகளிலும் மோப்பநாய் உதவியுடனும் வெடிபொருள்களை கண்டறியும் அதிநவீன கருவி களுடனும் தொடர் சோத னைகள் மேற்கொண்டுள்ள னர். மேலும் மதுரை ரயில் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர் களது உடைமைகளும் தீவிர சோதனைக்கு உள்ளாக் கப்படுகின்றன. மேலும் ரயில் நிலை யத்தில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள ரயில் பெட்டிகள், மதுரையில் இருந்து புறப் படும் ரயில்கள் உள்ளிட்ட அனைத்திலும் தீவிர சோதனை மேற்கொள்ளப் படுகிறது. மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினரும் இணைந்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப்பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.