முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தேனி, நவ.30- நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரண மாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் கண்மாய், குளம் உள்ளிட்ட அனைத்து நீர் நிலை களும் நிரம்பியுள்ளன. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1994 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 66.44 அடியாக உள்ளது. 1483 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 1719 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 124 கன அடி நீர் வரு கிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.57 அடியாக உள்ளது. 218 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழையளவு பெரியாறு 5, தேக்கடி 6.8, வீரபாண்டி 9, சண்முகா நதி அணை 3.6, சோத்துப்பாறை 2, போடி 0.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
ஆண்டிபட்டியில் நகை திருட்டு
தேனி, நவ.30- ஆண்டிபட்டியில் வீட்டின் கதவை உடைத்து நகை திருடிய மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகி றார்கள். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி யை சேர்ந்தவர் சடையாண்டி. இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் கரூரில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஊருக்கு திரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப் பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி திருடு போயிருந்தது. இதுகுறித்து சடையாண்டி கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
ஆண்டிபட்டி சமத்துவபுரத்திற்கு தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
தேனி, நவ.30- ஆண்டிபட்டி சமத்துவபுரத்திற்கு தார் சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அமைந்துள் ளது சமத்துவபுரம் கிராமம் .திமுக ஆட்சியின் போது திறந்து வைக்கப்பட்டது. இங்கே 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதன் அருகே 50-க்கும் மேற்பட்ட வீடு களைக் கொண்ட வெங்கடாசலம் கிராமமும் உள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக இப்பகுதிக்கு பேருந்து வசதி செய்யப்படவில்லை. ஆண்டிபட்டி - தேனி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலை விலும், ஆண்டிபட்டி - பாலக்கோம்பை சாலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சமத்துவ புரம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் ஆண்டிபட்டி நகர் பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது. இங்கு தார்ச்சாலை வசதி இல்லாத காரணத்தி னால் பல ஆண்டுகளாக பேருந்து வசதி செய்யப்பட வில்லை. அதே சமயம் விபத்து ,பிரசவம் போன்ற அவசிய காலங்களில் கூட ஆட்டோக்கள் கூட சாலை வசதி இல்லா ததால் வர மறுக்கிறார்கள். இருசக்கர வாகனத்தில் மட்டுமே தட்டு தடுமாறி சென்று வர வேண்டிய கட்டா யத்தில் உள்ளனர். இன்னும் இவர்கள் நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே கிராமத்திற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி, தரமான தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய தொழிலாளர் சங்க பெரியகுளம் தாலுகா மாநாடு
தேனி, நவ.30- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க பெரிய குளம் தாலுகா மாநாடு பெரியகுளத்தில் நடைபெற்றது. மாநாடிற்கு காளிமுத்து தலைமை வகித்தார். சங்க கொடியை மொக்கை ஏற்றி வைத்தார்.தேனி மாவட்ட தலை வர் .எல்.ஆர்.சங்கரசுப்பு.துவக்கி வைத்துப் பேசினார். மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எம்.வி.முருகன், மாவட்ட நிர்வாகி ஏ.பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசி னர்.மாநில செயலாளர் ஏ.வி.அண்ணாமலை.நிறைவு செய்து பேசினார். மாநாட்டில் தாலுகா தலைவராக பி. இளங்கோ வன்,செயலாளராக செளந்திரபாண்டியன்,பொருளாளரா அஞ்சலை உள்ளிட்ட 12 பேர் கொண்ட கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.
தேனி - போடி பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம்
தேனி, நவ.30- மதுரை - போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில் மதுரை - தேனி வரை பணிகள் நிறைவடைந்து ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. தேனி - போடி நாயக்கனூர் இடையேயான 15 கிமீ அகல ரயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்த புதிய ரயில் பாதையில் ஏற்கனவே ரயில் இன்ஜின் வெள்ளோட் டம் நடத்தப்பட்டது. தேனி - போடிநாயக்கனூர் புதிய அகல ரயில் பாதையில் டிசம்பர் 2 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 120 கிமீ வேகத்தில் ரயில் இன்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. எனவே அதி வேக சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள ரயில் பாதையை பொதுமக்கள் நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குளத்தை பாதுகாக்கக்கோரி சிபிஎம் முறையீடு
திருவில்லிபுத்தூர், நவ.30- மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவில்லிபுத்தூர் நகர் நம்பி நாயுடு தெரு கிளை சார்பில் நகராட்சி அலுவல கம் முன்பு கோரிக்கை முறையீடு இயக்கம் நடை பெற்றது. 26 வது வார்டில் பெண்கள் சுகாதார வளாகத்தை செயல்படுத்த வேண்டும். சேதமடைந்த குடிநீர் தொட்டி யை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். சக்கரை குளத்தை சுற்றிலும் தடுப்புச் சுவர் அமைத்து குளத்தை பாதுகாக்க வேண்டும். பாலத்தை சீரமைக்க வேண்டும் ஓடை பகுதிகளை தூர்வார வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை முறையீடு இயக்கம் நடை பெற்றது. நகர்க்குழு உறுப்பினர் பிச்சைக்கனி தலைமை தாங்கி னார் கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், நகரச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் பேசினர்.
தந்தையை கொன்று நாடகமாடிய மகன், தாய் கைது
கடமலைக்குண்டு, நவ.30- தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே ஜி.உசிலம்பட்டி யை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 55). கூலி வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி முருகேஸ்வரி (48). இவர்களுக்கு பூங்கொடி, ஜோதிலட்சுமி என்ற 2 மகள்களும் காளிதாஸ் (29) என்ற மகனும் உள்ளனர். காளிதாஸ் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி யில் வேலை செய்து வருகிறார். மகள்கள் இருவரும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக காளி தாஸ் ஜி.உசிலம்பட்டிக்கு வந்திருந்தார். மது போதைக்கு அடிமையான முனியாண்டி மனைவியுடன் அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஈடுபட்டு வந்துள் ளார். நேற்று முன்தினம் இரவு முனியாண்டி மது குடித்து விட்டு போதையில் முருகேஸ்வரி, காளிதாஸ் இருவரிட மும் தகராறு ஈடுபட்டுள்ளார். மேலும் காளிதாசை கன்னத்தில் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காளிதாஸ், முனியாண்டியை தாக்கி கீழே தள்ளியுள்ளார். கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த முனியாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இத னால் அதிர்ச்சியடைந்த முருகேஸ்வரி, காளிதாஸ் இரு வரும் கொலையை மறைக்க முடிவு செய்தனர். அதன்படி இரவு 12 மணியளவில் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத போது முனியாண்டி சடலத்தை அவர்கள் வீட்டின் முன்பாக சாலையில் வைத்து விட்டு மர்ம நபர்கள் கொலை செய்து விட்டதாக கத்தி கூச்சலிட்டுள்ளனர். தகவலறிந்த கண்டமனூர் போலீசார் ஜி.உசிலம்பட்டிக்கு சென்று முனியாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை யை தொடங்கினர். முனியாண்டிக்கு கொலை செய்யும் அளவில் எதிரிகள் யாரும் இல்லாததால் அவரது மனைவி மற்றும் மகன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் கண்டமனூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் முனியாண்டியை கொலை செய்து நாடகமாடியதை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவில் நிலத்தை மீட்கக்கோரி வட்டாட்சியரை கிராமமக்கள் முற்றுகை
சின்னாளப்பட்டி, நவ.30- திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ரெட்டி யார்சத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த கோனூர் கிராமத்தில், முத்தாலம்மன் கோயில் அருகே புறம்போக்கு நிலத்தில் வணிக நிறுவனங்கள் உள்ளன. கோயில் பெயரில் 50 ஆண்டுகளாக இவற்றிற்கான வரி செலுத்தப்பட்டு வரு கிறது. நிலத்தை கைப்பற்ற தனியார் சிலர் நீதிமன்றம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க துரி தப்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதனன்று ஊர் பொது மக்கள் 300க்கும் மேற்பட்டோர் கோவில் முன்பு ஒன்று கூடினர். இதனை அடுத்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சி யர் ரமேஷ் பாபு நேரில் வந்து பொதுமக்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றி விசா ரணை செய்து முடிவு செய்யப்படும் என புறப்பட்டார். உட னடியாக தீர்வு வேண்டும் என கிராம மக்கள் வட்டாட்சி யர் வாகனத்தின் முன் அமர்ந்து முற்றுகையிட்டனர்.
தாழ்வான வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து விடுகிறது நகராட்சி கூட்டத்தில் சிபிஎம் உறுப்பினர் புகார்
அருப்புக்கோட்டை, நவ.30- அருப்புக்கோட்டை நகராடசிக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் சுந்தர லட்சுமி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் அசோக்குமார் முன் னிலை வகித்தார். அப்போது, உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்ச னைகள் குறித்து கோரிக்கை விடுத்த னர். விருதுநகர் சாலையில் உள்ள மழை நீர் வடிகாலை ஆழப்படுத்தி, அகலப்படுத்த வேண்டும். தற்போது சிறிய வடிகாலாக உள்ளதால், மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து 16வது வார்டு பகுதிக்குள் உள்ள தாழ்வான வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. மேலும் மலையரசன் கோவில் தெரு வில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்பு கள் அதிகரித்து காணாமல் போய்விட் டது. இதனால், மழை நீர் கண் மாய்க்குள் செல்லாமல் குடியிருப்பு கள் புகுந்து விடுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிரமணியன் புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தலைவர், உறுப்பினரின் கோரிக்கை பரிசீலிக் கப்படும் என தெரிவித்தார்.
திருப்புவனம் கல்லூரி மாணவரை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்க: சிபிஎம்
சிவகங்கை,நவ.30- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் முருகானந்தம் மகன் ஜீவசூர்யாவை தற்கொலைக்கு தூண்டிய அனை வரையும் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மதுரையில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த ஜீவசூர்யா , திருப்புவனம் அருகே கழுகேர்கடை கிரா மத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஜீவ சூர்யா கழுகேர்கடை கிராமத்திற்கு சென்றிருந்தபோது எட்டு பேர் சேர்த்து அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் அடிப்பதை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் போட்டு விட்டார்கள். ஜீவசூர்யா வாகனம்,செல்போனையும் பறித்துக் கொண்டு ஜீவசூர்யாவை திருப்புவனம் வாரச்சந்தை அருகே போட்டு சென்றுள்ளனர்.இதன் பின்பு ஜீவசூர்யா தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை சந்தேக மரணம் என முதல் தகவல் அறிக்கை பதிவிட்டுள்ளனர்.இதனைக் கண்டித்து உற வினர்கள் திருப்புவனத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீட்டுக்கு பின்பு சந்தேகமரணம் என்பதை தற்கொலைக்கு தூண்டியதாக 306 செக்சனுக்கு மாற்றினர். இதனைத் தொடர்ந்து திருப்பு வனம் போலீசார் இரண்டு பேரை கைது செய்தனர். பாதிக்கப் பட்ட ஜீவசூர்யா குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், ஒன்றிய செய லாளர் அய்யம்பாண்டி, நகர் செயலாளர் ஈஸ்வரன், ஒன்றி யக்குழு உறுப்பினர் ரவி,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஜேம்ஸ் ராஜா,திருப்புவனம் ஒன்றிய செயலாளர் முத்துராஜா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். ஜீவசூர்யா குடும்பத்தாருக்கு நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என கட்சித்தலைவர்களிடம் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.