districts

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தருமபுரி, ஜூலை 12-  கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கர் நாடகா மாநில அணைகளான கபினி, கேஆர்எஸ் ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்கத் தொடங்கியது.  இந்நிலையில், அணைகளின் பாது காப்பு கருதி நீர்வரத்தின் அளவுக்கு ஏற்ப  கணக்கீடு செய்யப்பட்டு 2 அணைகளில் இருந்தும் தமிழகத்தை நோக்கி காவிரி யாற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. 2 தினங்களுக்கு முன்பு விநாடிக்கு 4000 கனஅடி என்ற அளவில் திறக்கப்பட்ட உபரி நீரானது, பின்னர் சூழலுக்கு ஏற்ப படிப்படி யாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாயன்று காலை 6 மணி அளவீட்டின்படி நீர்வரத்து விநாடிக்கு 98 ஆயிரம் கன அடி என்ற நிலையை தொட்டது. 9 மணியளவில் விநாடிக்கு 1 லட்சம் கன அடியைக் கடந்து காவிரி யாற்றில் ஆர்ப்பரிப்புடன் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக 3 நாட்களுக்கு முன்பே ஒகேனக்கல்லில் ஆற்றிலும், அருவியிலும் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட  நிர்வாகம் தடை அறிவித்தது. புதிய நீர்  வரத்தால் ஆற்றில் செல்லும் நீர் கலங்கிய  நிலையில் செந்நிறமாக காட்சியளிக்கிறது. ஒகேனக்கல் பகுதியில் இருகரைகளை யும் தொட்டபடி வெள்ளம் ஓடுகிறது. நீர் வரத்து அதிகரிப்பால் காவிரியாற்றில் பாறைகள் அணைத்தும் தண்ணீரில் மூழ்கி யுள்ளன. அதேபோல, பிரதான அருவி, தொங்கும் பாலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் நடைபாதை வெள்ளத்தில் மூழ்கி யது. வெள்ளப்பெருக்கு காரணமாக தரும புரி மாவட்ட காவிரியாற்றின் கரையோரப் பகுதிகளில் வருவாய், வனம் உள்ளிட்ட அரசுத் துறைகள் மூலம் தொடர் கண்கா ணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.