districts

ஓபிஎஸ், ரவீந்திரநாத் குமார் எம்.பி., மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

தேனி ,ஜன.8- வேட்பு மனு தாக்கலின் போது பிரமாணப் பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும்  தேனி மக்களவை உறுப்பி னருமான ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு  தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது . தேனி மாவட்ட திமுக முன்னாள் இளை ஞரணி செயலாளர் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மிலானி. இவர், கடந்த 2021 இல் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2019இல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக நெறிகளுக்கு மாறாக தங்களது வேட்பு மனு வுடன் கூடிய பிரமாணப் பத்திரத்தில் சொத்துக்கள்,

வருவாய், கல்வித் தகுதி ஆகி யவை குறித்து தவறான தகவல் அளித்து தேர்த லில் வெற்றி பெற்றதாக எம்.எல்.ஏ., எம்.பி.க், கள் மீதான குற்றவியல் வழக்குகளின் மீது விசாரணை நடத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் குமார் ஆகியோர் அரசியல் செல்வாக்கு உள்ள வர்கள் என்பதால் பொது நல நோக்குடன் வழக்கு தொடர்ந்துள்ள தமக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவின் மீது விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம், மனுதா ரரின் புகார் அடிப்படையில், இந்த வழக்கை பொது நல வழக்காக கொண்டு ஓ.பன்னீர் செல்வம், ப.ரவீந்திரநாத்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தவும், விசாரணை அறிக்கையை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை யினருக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் நீதிமன்ற பிடியா ணையின்றி கைது நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது, மனுதாரர் மற்றும் சாட்சிகளுக்கு விசாரணை அதிகாரி உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள் ளார்.