திருவில்லிபுத்தூர், மார்ச் 4 விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் பேரூராட்சி தலை வருக்கான தேர்தலில் திமுக சார்பில் 7 ஆவது வார்டு கவுன்சி லரான சுஜிதா மேரி வேட்பு மனு தாக்கல் செய்தார் ,எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத தால் போட்டியின்றி பேரூராட்சி தலை வராக சுஜிதா மேரி தங்க மாங்கனி தேர்வு செய்யப்பட்டார். இவர் திருவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தாமரைக்கனி மருமகள் ஆவார், இவருடைய கணவர் தங்க மாங்கனி தாமரைக் அணியின் 3 வது மகன் ஆவார். பேரூராட்சித் தலைவ ருக்கு திருவில்லிபுத்தூர் ஒன்றிய குழுத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான மல்லி ஆறுமுகம், மம்சாபுரத்தின் நகரச் செயலாளர் உதய சூரியன், அதிமுக பேரூராட்சி உறுப்பினர் பல்க் ராஜா ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தினார். மதியம்நடைபெற்ற துணைத் தலைவருக்கான தேர்தலில் சென்பக லட்சுமி என்பவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்.