திண்டுக்கல், ஏப்.18 பழனி அருகேயுள்ள கீரனூரில் டாக்டர் அம்பேத்கர் 133வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவாக படிப்பக திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு குருகுலம் முன்னாள் தலைமை ஆசிரியர் எ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். டாக்டர் பெரியசாமி, அம்பேத்கர் நினைவு படிப்பகத்தை திறந்து வைத்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் எம்.ராமசாமி, ஆசிரியர் ராஜா, கவிஞர் உதய பாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.