மதுரை, மார்ச் 15 - மதுரையில் உலகத் தமிழ்ச்சங்க மையக் கூட்ட ரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை தொடக்க விழா புத னன்று நடைபெற்றது.விழாவுக்கு மதுரை மாவட்ட ஆட்சி யர் எஸ். அனீஷ் சேகர் தலைமை வகித்தார். தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது பாடத்திட்டங்களை தாண்டி வாசிப்புப் பழக்கத்தை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். செவ்வியல் மொழிகளில் தமிழும், சீன மும் மட்டுமே இன்றும் வழக்கத்தில் உள்ளது.இலக்கிய மும், இலக்கணமும் கடந்த கால மக்களின் வாழ்வியல் மற்றும் வரலாறுகளை கூறுவது மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளையும் உணர்த்துவதாக அமைகின்றன. சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், திருக்குற ளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள் இன்றும் மக்களி டையே பேசப்பட்டு வருகின்றன. தமிழ் மொழி காலத்துக்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வது மட்டுமின்றி தனித்து இயங்கும்
தன்மையும் கொண்டது. வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த நம் தமிழின் தொன்மையை உலகறியச் செய்வ தில் இன்றைய இளைஞர்களின் பங்களிப்பு அவசியம். தமிழர்களின் தொன்மையை உணர்த்தும் வகையில் கீழடியில் உலகத் தரத்திலான அருங்காட்சியகம் திறக் கப்பட்டுள்ளது. மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூலகம் அறிவுசார் மையமாக திகழும். அத்தகு அறிவுசார் மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார். உலகத் தமிழ்ச் சங்கத்தில் புதன்கிழமை தொடங்கியுள்ள இப்பயிற்சி பட்டறை 7 நாட்கள் வரை நடைபெற உள்ளது. இதில், தினந்தோறும் பல்வேறு தமிழறிஞர்கள், பேராசிரியர்கள் பயிற்சி அளிக்க உள்ள னர். மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட திறனறிதல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாணவ, மாணவி கள் பங்கேற்று பயிற்சி பெற உள்ளனர். இந்நிகழ்ச்சியில், மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சி யர் (வளர்ச்சி) செ.சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான் ஷு நிகம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோ. தளபதி, மு.பூமிநாதன் (மதுரை தெற்கு), மாநக ராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி மண்ட லத் தலைவர் அ.சரவண புவனேஸ்வரி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வே.முருகன் உள்ளிட்ட அரசு அலு வலர்கள், பயிற்சி பெற வந்துள்ள மாணவ, மாணவி கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.