districts

img

விருதுநகரில் அரிசி இன்றி அம்மா உணவகங்கள் மூடும் நிலை

விருதுநகர், ஜன.18- விருதுநகர் நகராட்சி நிர்  வாகம் அரிசி வாங்கித் தராத  காரணத்தால்   இரு அம்மா உணவகங்களும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத் தலைநகரான விருதுநகரில் கடந்த ஆட்சி யில் ரயில்வே பீடர் சாலை  மற்றும் மருத்துவக் கல்லூரி  மருத்துவமனை ஆகிய  இடங்களில் அம்மா உண வகங்கள் தொடங்கப்பட் டன. இங்கு, காலை மற்றும்  மதிய நேரங்களில் குறைந்த விலையில்  உணவு வழங்  கப்பட்டது. எனவே, நாள் தோறும் சாதாரண ஏழை, எளிய மக்கள் அம்மா உண வகத்திற்கு வந்து உண வருந்தி சென்றனர். இந்த உணவகங்களில்  உணவு தயாரிப்பதற்கு விருதுநகர் கூட்டுறவு பண்டக  சாலையிலிருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட் கள் வழங்கப்பட்டு வந்தன.

 மேலும், அம்மா  உணவகங்க ளில் உணவு தயாரிப்பதற் கான பொருட்களை வாங்கிக் கொடுக்க நகராட்சியில் தனியாக ஒரு அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார். அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் காலியானால் உடனடியாக அதை வாங்கித் தருவது இவரது கடமை யாகும். 3  மாதங்களுக்கு  ஒரு முறை நகராட்சி நிர்வாகமா னது, வரைவோலை மூலம் பணத்தை கூட்டுறவு பண்டக சாலைக்கு வழங்க வேண் டும்.   பின்பு, அங்கிருந்து பச்ச ரிசி 450 கிலோவும் 1200 கிலோ  புழுங்கல் அரிசி என மொத்  தம் 1650 கிலோ அரிசி ஒவ் வொரு அம்மா உணவகத் திற்கும் வழங்கப்படும். அதன் மூலம் இட்லி, சாம் பார் சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை தயாரித்து பொது மக்களுக்கு உண வக ஊழியர்கள் விநியோ கம் செய்து வந்தனர்.

இந்தநிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பே அம்மா உணவகங்களில் அரிசி தீர்ந்து போனது. இது குறித்து சம்மந்தப்பட்ட நக ராட்சி அலுவலரிடம் உண வக பெண் ஊழியர்கள் தக வல் தெரிவித்துள்ளனர். ஆனால், அலுவலர், எழுதி கொடுக்காத காரணத்தால், ஆணையாளர் காசோலை யில் கையெழுத்து இட வில்லை. இதனால், அம்மா  உணவகங்களுக்குத் தேவை  யான அரிசி கிடைக்க வில்லை. இதனால், ஊழி யர்கள் தங்களது சொந்த பணத்தை போட்டு குறைந்த விலைக்கு வெளி மார்க்கெட்  டில் அரிசி வாங்கி சில நாட் கள் பொதுமக்களுக்கு உணவு வழங்கியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வா கமானது, ஏழை, எளிய மக்  கள் குறைந்த செலவில்  தங்களுக்குத் தேவையான உணவை  அம்மா உணவ கங்கள் மூலம் பெற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள்  தெரி விக்கின்றனர்.