அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் சென்னை விளையாட்டு விடுதி அணி முதலிடம்
தேனி, மே 22- பெரியகுளத்தில் நடந்த அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் சென்னை விளையாட்டு விடுதி அணி முதலிடத்தைப் பிடித்தது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில், சிதம்பர சூரியநாராயணன் நினைவு கோப் பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி கடந்த 15 ஆம் தேதி தொடங்கி யது. இந்தியாவின் புகழ்பெற்ற 23 அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் முறையில் போட்டி கள் நடைபெற்றது. இறுதிச்சுற்றின் முதல்போட்டியில் டேராடூன் ஓ.என்.ஜி.சி.அணியும், பெங்க ளூரூ பாங்க் ஆப் பரோடா அணியும் கள மிறங்கின. இதில் 88:67 என்ற புள்ளிக்கண கில் டேராடூன் அணி வென்றது. இரண்டாம் போட்டியில் புதுதில்லி விமா னப்படை அணி, சென்னை விளையாட்டு விடுதி அணிகள் மோதின. இதில் 87:83 புள்ளிக்கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. புள்ளிகள் அடிப்படையில் சென்னை விளையாட்டு விடுதி அணி, டேராடூன் ஓஎன்ஜிசி.அணி, இந்திய விமானப்படை அணி, பெங்களூரூ பாங்க் ஆப் பரோடா அணிகள் முதல் நான்கு இடங்களை பெற் றது. ஆட்சியர் க.வீ.முரளீதரன் தலைமை யில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. கூட்டு றவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி விளை யாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி னார். பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய கூடைப் பந்து வீராங்கனை அனிதா பால்துரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் பி.டி. சிதம்பர சூரியநாராயணன் நினைவாக முதல் பரிசு ரூ 50 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை சென்னை விளை யாட்டு விடுதி அணிக்கு வழங்கப்பட்டது. அடுத்தடுத்து வெற்றி பெற்ற அணி களுக்கு தலா ரூ.40 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரராக சென்னை விளையாட்டு விடுதி அணியைச் சேர்ந்த கார்த்திக் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. சிறந்த நன்னடத்தை அணியான ஆட்லரி சென்டர் ஹைதராபாத் அணிக்கு ரூ.8 ஆயி ரம் வழங்கப்பட்டது. சிறந்த உள்ளூர் விளையாட்டு வீரர் பெரி யகுளம் சில்வர் ஜூப்ளி விளையாட்டுக்கழ கத்தைச் சேர்ந்த சூரியபாலனுக்கு ரூ.2 ஆயி ரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை. சில்வர் ஜூப்ளி விளை யாட்டு கழக தலைவர் அமர்நாத். செயலா ளர் சூரியவேலு, பொருளாளர் டாக்டர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் செய்தி ருந்தனர்.
விருதுநகர் அருகே தனியார் எண்ணெய் ஆலையில் தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் நாசம்
விருதுநகர், மே 22- விருதுநகர் அருகே ரோசல்பட்டியில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ஏற் பட்டது. விருதுநகர் பவுண்டு தெருவைச் சேர்ந்த வர் அப்பணசாமி. இவருக்கு சொந்தமான எண்ணெய் தயாரிக்கும் ஆலையானது, ரோசல்பட்டி பகுதியில் உள்ளது. இங்கு முந்திரி எண்ணெய், தேங்காய் எண்ணெய் உள்ளிட்டவை தயார் செய்யப்பட்டு வரு வதாக தெரிகிறது. இந்தநிலையில், ஆலை யின் உள் பகுதியில் சனிக்கிழமையன்று இரவு திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீயானது ஆலையின் அனைத்துப் பகுதிக்கும் பரவியது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். விருது நகர், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீய ணைப்பு வாகனங்கள் மூலம் பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணெய் உற்பத்திப் பொருட்கள் தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து விருது நகர் ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே கிணற்றில் ரத்தக்காயங்களுடன் இளம்பெண் மர்மச்சாவு
போலீசார் விசாரணை
தேனி, மே 22- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தையகவுண்டன்பட்டி கிரா மத்தில் கணவர் செல்போன் வாங்கி தராத தால் வீட்டை விட்டு வெளியே சென்ற இளம் பெண், அருகில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் ரத்த காயங்களுடன் இறந்த கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டிபட்டி அருகே சித்தையகவுண் டன்பட்டி கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகள் கவிதா(22). கவிதாவும் அதே கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்ப வரின் மகன் பிரகதீஸ்வரன் என்பவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த இரண் டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 மாத பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலை யில் கவிதா அவரது கணவரிடம் கடந்த ஒரு வருடமாக செல்போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளதாக தெரிகிறது. கணவர் தற் போது பணம் இல்லை என்று சொல்லி செல்போன் வாங்கி தராமல் இருந்துள் ளார். இந்நிலையில் பிரகதீஸ்வரனின் தம்பி சக்தீஸ்வரனின் மனைவிக்கு சக்தீஸ்வ ரன் புதிய செல்போன் வாங்கி கொடுத்துள் ளார். இதனை பார்த்த கவிதா எனக்கும் புதிய செல்போன் வாங்கித் தரவேண்டும் என்று கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் பிரச்சனை எற்பட்டு கவிதா மனவருத்தத்தில் இருந்து, அதனால் வீட்டை வெளியே சென்றுள்ளார். வீட்டை விட்டு சென்ற கவிதாவை பிரகதீஸ்வரன் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தலை மற்றும் உடம்பில் ரத்த காயங்களுன் கவிதா இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கவிதாவை மீட்டு, தேனி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
சிவகங்கை, மே 23- சிவகங்கை மாவட்டம், வைகை பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள் ளார். வைகை பூர்வீக பாசன பகுதி 1 மற்றும் 2 கண்மாய் பகுதிகளில் உள்ள வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறும் பொருட்டு வைகை அணையிலிருந்து மே 23 முதல் 28 ஆம் தேதி வரை உள்ள ஐந்து நாட்களுக்கு 582 மில்லியன் கன அடி நீர் திறந்து விட வும், மேலும், பகுதி 3 இல் கண்மாய் பகுதி யில் உள்ள வேளாண் நிலங்கள் பாசன வசதி பெறும் பொருட்டு மே 29 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு 267 மில்லியன் கன அடி நீரும் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே, வேளாண் பெருங்குடி மக்கள் திறந்துவிடப்படும் தண்ணீரினை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற்றிட வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தனியார் மர அறுவை ஆலையில் தீ விபத்து
விருதுநகர், மே.22- விருதுநகர் தனியார் மர அறுவை ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்து சேதமாகின. விருதுநகர் - மல்லாங்கிணறு சாலையில் மொட்டையசாமி என்பவருக்கு சொந்தமான மரம் அறுக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் நாள்தோறும் ஆறு பணியாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆலை இயக்கப்படவில்லை. இந்தநிலையில், ஆலையில் தீப்பற்றி எரிவதாக அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஆலை உரிமையாளர்கள் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர், விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான மரம் மற்றும் இயந்திரங்கள் தீயில் கருகி நாசமாகின. இந்த சம்பவம் குறித்து விருதுநகர் ஊரக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
திருநெல்வேலி, மே 22- தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டை சேர்ந்தவர் முருகன் (வயது35). இவர் சனிக்கிழமை இரவில் மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்து விட்டு தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அரிய குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதி யது.இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் தலை யில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்தி லேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த பாளை தாலுகா போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவ ரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நகைக் கடைகளில் நூதன முறையில் திருடியவன் கைது
மதுரை, மே 22- நகைக் கடைகளில் நகை வாங்குவது போல வந்து நகை களை திருடியவனை காவல்துறையினர் கைது செய்த னர். மதுரை மாநகரில் அண்ணாநகர், விளக்குத்தூண், தெற்குவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடை களில் நகை வாங்குவது போல வந்து, நகைகளை திருடும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. இந்த திருட்டுக்கும் பலை பிடிக்க மதுரை மாநகர் காவல் ஆணையர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையர் (வடக்கு) இராஜசேகரன் நேரடி பார்வையில் அண்ணா நகர் சரக காவல் உதவி ஆணையர் சூரக்குமார் மற்றும் ஆய்வாளர் அனுராதா தலைமையில் தனிப்படை அமைக் கப்பட்டது. தனிப்படையினர் திருட்டுக்கும்பலை தேடிவந்தனர்.இதில் மதுரை மாநகர் புதூரை சேர்ந்த அரவிந்த் (22) என்ப வரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர், அண்ணா நகர், விளக்குத்தூண், தெற்குவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள நகைகடையில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார் .அவரிடம் இருந்து சுமார் ரூ .3 லட்சத்து 53 ஆயிரம் மதிப்புள்ள 9 பவுன் தங்க நகைகள் பறி முதல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் அரவிந்த்தை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேல்கரையில் நூலகம் தொடர்ந்து செயல்பட கோரிக்கை
மானாமதுரை, மே 22- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தின் மானாமதுரை கிளை மாநாடு டாக்டர் பெருமாள் தலை மையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜுவசிந்தன் துவக்கி வைத்துப் பேசினார். கிளைச் தலைவர் தேவதாஸ் வேலைஅறிக்கை சமர்பித்தார். மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன்,மாவட்ட பொருளாளர் பாலமுருகன், பாரதி தமிழ்சங்கத் தலைவர் திருமாவளவன், திருவருட்பேரவைத்தலைவர் சோமசுந்தர பாரதி,தலைமைஆசிரியர் சேவியர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஆசிரியர் செல்வம் குடும்பத்தினர் உருவாக்கிய ஓவியக் கண்காட்சியை ஆசிரியர் சபரிராஜன் திறந்து வைத்தார். மண்பாண்ட கண்காட்சியை ஆசிரியர் தங்கமாரி யப்பன் திறந்துவைத்தார். தீக்கதிர் நிருபர் ராமச்சந்திரன், சிலம்பம் ஆசிரியர் முனைவர் பெருமாள், ஒயிலாட்ட ஆசிரி யர் மலைச்சாமி, தாய் அறக்கட்டளைத்தலைவரும் தவழும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில செயலாளரும் தமிழக அரசு அறிவித்துள்ள நலக்குழு உறுப்பினருமான புஷ்பா ஆகியோர் பாராட்டப்பட்டனர். மானாமதுரை மேல்கரையில் பழைய மாணவர் சங்க கட்டிடத்தில் நூலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும். மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை விரி வாக்கம் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிளைத்தலைவராக தேவதாஸ், கிளைச்செயலாளராக ரசீந்தரகுமார், பொருளாளராக சபரிராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அப்துல்கலாம் படித்த பள்ளியில் சேதமடைந்த கட்டடம்
இராமேஸ்வரம்,மே.22- இராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் படித்த பள்ளியில் சேதமடைந்த நிலையில் உள்ள கட்டடத்தை அகற்ற வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம்,இராமேசுவரத்தில் மண்ட பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மறைந்து முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் படித்த பள்ளி என்ற பெருமையை பெற்றுள் ளது. ஆனால் கடந்த 2001-02 ஆம் ஆண்டு நிதியில் இரண்டு வகுப்பறை கட்டப்பட்டது. 20 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலை யில் பள்ளி கட்டடம் சேதமடைந்துள்ளது. மேலும் இந்த கட்ட டம் அருகே யாரும் செல்ல வேண்டாம் என அறிவிப்பு எச்ச ரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பள்ளி அமைந்துள்ள இடம் 10 செண்ட் இடத்தில் மட்டுமே உள்ளது. சேதமடைந்த கட்டடம் இடிந்துவிழுந்து விபத்து நிகழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்துள்ள வகுப்பறை கட்டடத்தை உடனே இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நூல் விலை உயர்வுக்கு கண்டனம் மே 25-31 வரை இராஜபாளையம் பகுதி மருந்துத்துணி ஏற்றுமதியாளர்கள் வேலைநிறுத்தம்
விருதுநகர், மே 22- நூல் விலை உயர்வை கண்டித்து விருதுநகர் மாவட்டம், இராஜபாளை யம் அருகே சத்திரப்பட்டி பகுதியில் வரும் மே.25-31 ஆம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு படப் போவதாக மருத்துவத் துணி ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தி யாளர்கள் அறிவித்துள்ளனர். இராஜபாளையம் அருகே உள்ளது சத்திரப்பட்டி பகுதி. இங்கு, மருத்துவத் துணி (பேண்டேஜ் )உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மருத்துவ துணி உற்பத்தியில் 6 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இப்பகுதியில் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மருத்துவ துணியானது உலகின் பல பகுதி களுக்கும் ஏற்றுமதி செய்யபட்டு வரு கிறது. இந்நிலையில், கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு வரை 40 நம்பர் நூலின் விலையானது கிலோ ஒன்றுக்கு ரூ. 200க்கு வாங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அதன் விலையா னது ரூ. 400 ஆக உயர்ந்துள்ளது. நூலை அதிக விலை கொடுத்து மருத்துவத் துணி உற்பத்தி செய்வ தால், உற்பத்தியாளர்கள் பெருத்த நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், நூல் விலை உயர்வுக்கு காரணம் ஏராளமான பஞ்சுகளை விலைக்கு வாங்கி அதைப் பதுக்கி வைத்து, செயற்கையான தட்டுப் பாட்டை ஏற்படுத்தி அதிகமான விலைக்கு விற்பனை செய்வதால் தான் நூல் விலை உயர்வு ஏற்பட்டுள் ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஒன்றிய அரசானது, பஞ்சுகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பதுக்கி வைக்கப்பட்டுள்ள பஞ்சு களை வெளியே கொண்டு வர வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் நூலின் விலையானது குறைய வாய்ப்புள்ளது என ஏற்று மதியாளர்கள் மற்றும் உற்பத்தியா ளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசானது, நூல் விலையை கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மே 25 முதல் 31 வரை சத்திரப்பட்டி பகுதியில் இயங்கக்கூடிய விசைத்தறி கூடங்கள் மற்றும் ஏற்றுமதி நிறு வனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்க தலை வர் ஆறுமுகம், மருத்துவத் துணி உற்பத்தியாளர் சங்க தலைவர் செந்தில் ராஜ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட் டத்தால் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற் படும் எனவும், 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
தக்காளி விலை உயர்வு ஒரு மாதத்திற்கு நீடிக்கும்
வியாபாரிகள் தகவல்
திண்டுக்கல், மே 22- திண்டுக்கல் அய்யலூர் தக்காளி சந்தை யில் கடந்த 15 தினங்களாக கிலோ ரூ.70க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை ஒரு மாதத்திற்கு நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். திண்டுக்கல் அருகேயுள்ள அய்யலூ ரில் தக்காளிக்கு என தனி சந்தை உள்ளது. மாலை நேரத்தில் ஏலம் விடப்படும். அய்ய லூரைச் சுற்றியுள்ள மலைப்பட்டி, கடவூர், புத்தூர், காக்காய கவுண்டனூர், காக்கா யனூர், வடமதுரை, தென்னம்பட்டி, பஞ்சந்தாங்கி, கொம்பேறிபட்டி, பாகா நத்தம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து 30 கி.மீ வரை இப்பகுதி விவசாயிகள் தக் காளி விளைவிக்கின்றனர். இந்த சந்தைக்கு வரக்கூடிய தக்காளி யை வாங்க திருச்சி, மதுரை, சென்னை, கோவை தாராபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்கிறார்கள். சென்ற மாதம் வரை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும். தமிழகத்தி லும் அதிகப்படியான தக்காளி சாகுபடி யானது.இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த தக்காளிக்கு கட்டுப்படியான விலை கிடைக்காத நிலையால் தக்காளி யை சாலையோரங்களில் கொட்டிச்சென்ற அவல நிலை இருந்தது. தற்போது ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பருவ மழை பெய்த கார ணத்தால் அந்த மாநிலங்களில் தக்காளி சாகு படி அழிந்தது. இதனால் தமிழகத்திற்கு தக்காளி வருகை இல்லாத காரணத்தாலும் தமிழகத்தின் தேவைக்கு ஏற்ப தக்காளி வரத்து இல்லாததாலும் 15 தினங்களுக்கு முன்பு இருந்தே 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ.1000 முதல் ரூ.1200 வரை விலை போனது. அதாவது 15 தினங்களாக ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு ஒரே விலை யாக ஏற்றமுமின்றி, இறக்கமுமின்றி விற்ப னையாகி வருகிறது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தக்காளி நாற்றுகள் சாகுபடிக்கு வர 30 தினங்கள் ஆகும். இத னால் இந்த விலை இன்னும் 30 தினங்க ளுக்கு நீடிக்கும் என்று என்று வியாபாரி கள் தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் உட்பட 68 பேர் கைது
தூத்துக்குடி, மே 22- தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு காவல்துறை நடத்திய துப் பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த வர்களுக்கு 4ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி பல்வேறு பகுதிகளில்அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில்துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக் குடி மாநகராட்சி மையானத்தில் புதைக் கப்பட்டு கல்லறைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கல்லறையில் அஞ்சலி செலுத்த இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று திரண்டு கையில் பதாகைகளுடன் ஊர்வலமாக கோசங்கள் எழுப்பி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து வெளியே வந்த உறவினர்கள் சிபிஐ தாக்கல் செய்த விசா ரணை அறிக்கை உண்மைக்குப் புறம்பாக இருப்பதாக கூறி சிபிஐ விசாரணை நகலைக் கிழித்து எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பாளையங்கோட்டை தூத்துக்குடி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை தென்பாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
காயம்பட்டினம்: புதிய கட்டிடங்களுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடி, மே 22- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் காயல்பட்டினம் நக ராட்சிக்குட்பட்ட கேடிஎம் தெரு மற்றும் ஓடக்கரை ஆகிய பகுதிகளில் உள்ள ஊரா ட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்க ளுக்கு மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு த்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் காயல்பட்டினம் நக ராட்சிக்குட்பட்ட கேடிஎம் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திருச்செந் தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி யின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள 2 வகுப்பறை கட்டிடங்க ளுக்கும், ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20.50 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள 2 வகுப் பறை கட்டிடங்களுக்கும் அடிக்கல் நாட்டிய தோடு, அப்பகுதி மக்களின் கோரிக்கை யான பஸ் நிறுத்தம் வசதி ஏற்படுத்தி தரப் படும், மேலும் சட்டமன்ற தொகுதி மேம் பாட்டு நிதியின் கீழ் நியாய விலைக்கடை கட்டித்தரப்படும், மேலும் இப்பள்ளிக்கு வரும் கல்வியாண்டிலேயே மேசை, நாற் காலிகள் வாங்கி தரப்படும் என உறுதி யளித்தார். திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம் மேல திருச்செந்தூர் ஊராட்சிக்குட்பட்ட கீழநாலு மூலைக்கிணறு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் படவுள்ள 2 வகுப்பறை கட்டிடங்களுக்கும், அப்பள்ளியின் அருகாமையில் திருச்செந் தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி யின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படவுள்ள பயணியர் நிழற்குடை ஆகியவற்றிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், ஆதிதிராவிடர் காலனியில் மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.8.25 லட்சம் செலவில் புதியதாக கட்டப் பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை ஞாயிறன்று பொதுமக்கள் பயன்பாட்டிற் காக திறந்து வைத்தார். நிகழ்ச்சிகளில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, வட்டாட்சியர் முரு கேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்க லரசி, காயல்பட்டிணம் நகர்மன்ற தலை வர் முத்து முகமது, திருச்செந்தூர் நகர்மன்ற துணைத்தலைவர் ரமேஷ், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
கட்டுமான உழைக்கும் பெண்கள் மாவட்ட மாநாடு
திருவில்லிபுத்தூர், மே 22- காமராஜர் மாவட்ட சிஐடியு கட்டுமான சங்க உழைக்கும் பெண்கள் நாலாவது மாவட்ட மாநாடு திருவில்லிபுத்தூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு ஆர். செவத்தியம்மாள் தலைமை தாங்கினார் .சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் வி. சந்தனம் துவக்கி வைத்துப் பேசினார். மாநாட்டில் செயலாளர் அறிக்கையும் பொருளாளர் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டன. சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் பி. இராமர் மற்றும் தோழமைச்சங்க நிர்வாகிகள் பி. பாலகிருஷ்ணன் , எம். பிச்சைக்கனி, எம். திருமலை உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர் . சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி நிறைவுரையாற்றினார். 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. கன்வீனராக ஆர். செவத்தியம்மாள் தேர்வு செய்யப்பட்டார். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். வேலை இல்லா காலம் மழைக்காலங்களில் நிவாரணம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
6 பவுன் நகை திருட்டு
திருநெல்வேலி, மே 22- நெல்லை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாளையை அடுத்த கே.டி.சி. நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் நித்யகல்யாணி (70). இவர் சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளி யூர் சென்றுள்ளார். இந்த நிலையில் மாடியில் வாடகைக்கு வசித்து வரும் நபர், கீழே பூட்டிக்கிடந்த நித்ய கல்யாணி யின் வீடு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந் துள்ளார். அவர் அளித்த தகவலின்பேரில் நித்ய கல்யாணி ஞாயி றன்று அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த நித்ய கல்யாணி பெருமாள்புரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். நெல்லை கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷ னர் சுரேஷ்குமார் அங்கு சென்று ஆய்வு செய்தார்.
கிணற்றில் முதியவர் சடலம்
திருவில்லிபுத்தூர், மே 22- திருவில்லிபுத்தூர் அருகே நாகபாளையம் ஊரைச் சேர்ந்தவர் முத்துசாமி.இவது தந்தை கிருஷ்ணசாமி (75) கடந்த 21ஆம் தேதி மாலை தனியாருக்குச் சொந்த மான கிணற்றில் கிருஷ்ணசாமி மிதப்பதாக உறவினர் ஒருவர் முத்துசாமிக்கு தகவல் கொடுத்தார் இந்த தகவலின் அடிப்படையில் முத்துச்சாமி அங்கு சென்றார். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தார். தீயணைப்புத்துறையினர் வந்து கிணற்றுக்குள் இருந்து கிருஷ்ணசாமியை மீட்டனர் மேலும் சிகிச்சைக்காக திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் பரி சோதனை செய்த மருத்துவர் கிருஷ்ணசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர் இது தொடர்பாக முத்துசாமி கொடுத்த புகாரின் அடிப்ப டையில் மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
பெட்டிக் கடைக்கு தீவைப்பு
திருவில்லிபுத்தூர், மே 22- திருவில்லிபுத்தூர் அருகே வலையங்குளம் ஊரைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 62). இவர் காடனேரி விலக்கு அருகே பெட்டிக் கடை வைத்துள்ளார் .இவர் வழக்கம் போல் கடையை திறந்து விட்டு 19ஆம் தேதி இரவு மூடிவிட்டுச் சென்றார். மே 21 அன்று அதிகாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டி ருந்த நத்தம்பட்டி போலீசார் பெரியகருப்பன் பெட்டி கடை தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து தீய ணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பெரிய கருப்பனுக்கும் தகவல் கொடுத்தனர் பெட்டிக் கடைக்குள் சுமார் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருந்துள்ளன. இவை தீயில் எரிந்து விட்டன . இச்சம்பவம் குறித்து பெரியகருப்பன் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் . புகாரின் அடிப்படையில் நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாகனம் மோதி தொழிலாளி பலி
காரியாபட்டி, மே 22- காரியாபட்டி அருகே நான்கு வழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி யதில் தொழிலாளி உயிரிழந்தார். மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே உள்ள எஸ். வெள்ளாகுளத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி(41). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள பழக்கடையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். வேலை முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வானம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து, மல்லாங்கிணறு போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய வாகனம் மற்றும் அதன் ஓட்டு நரைத் தேடி வருகின்றனர்.